தமிழக பட்ஜெட்-முக்கிய அம்சங்கள்
-முதியோர், ஆதரவற்றோருக்கு மாத உதவித் தொகை வழங்க ரூ. 1,002 கோடி ஒதுக்கீடு
-பள்ளிகளில் வாரம் 3 முட்டைகள் வழங்க திட்டம். இதற்காக ரூ. 178 கோடி ஒதுக்கீடு
-சென்னை அண்ணா சாலையில் ரூ. 500 கோடியில் புதிய மேம்பாலங்கள்
-தென் மாவட்ட மன நோயாளிகள் சிகிச்சை பெற வசதியாக அரசு மன நல மருத்துமனை தேனியில் ரூ. 10 கோடியில் அமைக்கப்படும்.
-மாற்றுத் திறனாளி மாணவர்கள் உயர் கல்வி படிக்க கல்விக் கட்டணம் ரத்து
-9045 சத்துணவு மையங்கள் அமைக்க ரூ. 178 கோடி ஒதுக்கீடு.
-மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்களுக்கு ரூ. 176 கோடி ஒதுக்கீடு. அவர்களுக்கான மாத உதவித் தொகை ரூ. 400 ஆக அதிகரிப்பு
-மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு உதவி செய்ய ரூ. 124 கோடி ஒதுக்கீடு.
-இலவச காஸ் அடுப்புத் திட்டத்திற்கு ரூ. 140 கோடி ஒதுக்கீடு
-புதிதாக 50,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்.
-நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் வாழும் மகளிரைக் கொண்ட சுய உதவிக் குழுக்களை அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
-சென்னை ராஜிவ் காந்தி சாலையில் மேம்பாலம் கட்டப்படும்
-அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்கு ரூ. 508 கோடி ஒதுக்கீடு
-ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு.
-ஒகனேக்கல் குடிநீர்த் திட்டம் 2015ம் ஆண்டு முடிவடையும்.
-குடிநீர் வழங்கல் திட்டங்களுக்கு ரூ. 1183 கோடி ஒதுக்கீடு.
-இந்திரா காந்தி வீட்டு வசதித் திட்டத்தின் கீழான உதவி ரூ. 60,000 அதிகரிக்கப்படும்.
-கர்ப்பிணி்ப் பெண்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச அயோடின் கலந்த உப்பு வழங்கும் திட்ட
-ரூ. 500 கோடியில் அண்ணா சாலையில் மேம்பாலங்கள் கட்டப்படும்.
-கோவையில் ரூ. 284 கோடி செலவில் புதிய மேற்கு வெளிவட்டச் சாலை அமைக்கப்படும். மேலும் கோவை-மேட்டுப்பாளையம் இடையே நான்கு வழிசாலை அமைக்க ரூ.40 கோடி ஒதுக்கீடு
-ஓலைக் குடிசைகளை அகற்றி நிரந்தர கான்க்ரீட் வீடுகளாக மாறறும் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்திற்கு ரூ. 1800 கோடி ஒதுக்கீடு.
-பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்திற்கு ரூ. 300 கோடி. ஏழைப் பெண்களுக்கு ரூ. 25,000 திருமண உதவித் தொகையாக வழங்கப்படும்.
-36 புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.
-அனைத்து ஊராட்சிகளிலும் திருமண மண்டபங்கள் அமைக்கப்படும்.
-ரூ. 2500 கோடியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்.
-வணிக சின்னம் இடப்பட்ட காபி தூள், மாவு, பொடி, ஈர மாவு ஆகியவைகளுக்கு வரிகுறைப்பு அளிக்கப்படுகிறது
-தையல் ஊசி, கத்தரிக்கோல், பட்டன், பெயிண்ட் பிரஷ் ஆகியவற்றுக்கும் வரி குறைப்பு
-கைத்தறியில் பயன்படும் ஜரிகைக்கு கொள்முதல், விற்பனை வரி ரத்து
-திடப்பொருளில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருளுக்கு வரிவிலக்கு
-சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 600 கோடி
-இலவச தொலைக்காட்சி் திட்டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு. நடப்பாண்டில் 44 லட்சத்து 88 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படும்.
-கோவையில் சாலை சீரமைப்புத் திட்டங்களுக்கு ரூ. 284 கோடி ஒதுக்கீடு.
-3000 பேருந்துகள் வாங்க ரூ. 250 கோடி
-தமிழக சாப்ட்வேர் நிறுவனங்களின் ஏற்றுமதி தொடர்ந்து ஏறுமுகம்.
-2008-09ல் ரூ. 36,650 கோடியாக சாப்ட்வேர் ஏற்றுமதி இருந்தது.
-மானாமதுரையில் வீடியோகான் தொலைக்காட்சி மின்னணுப் பொருள் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவப்படும்.
-விழுப்புரத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
-சிறு தொழில் துறைக்கு ரூ. 98 கோடி ஒதுக்கீடு
-ரூ. 17 கோடி மதிப்பீட்டில் 150 பேர் தங்கும் வசதியுடன் கூடிய புற்று நோய் சிகிச்சை மையம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தொடங்கப்படும்.
-மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மயக்க மருந்தியல் துறை இந்தியாவிலேயே மிகப் பெரிய துறையாகும். இது வரும் நிதியாண்டில் உயர் மையமாக தரம் உயர்த்தப்படும்.
-திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
-சுகாதாரத் துறைக்கு ரூ. 3889 கோடி ஒதுக்கீடு.
-கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 750 கோடி ஒதுக்கீடு.
-108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு ரூ. 79 கோடி ஒதுக்கீடு.
-மீனவர்கள் பயன்படுத்தும் ஐஸ் கட்டிகளுக்கு வரி விலக்கு
-கடல் அரிப்பு தடுப்புத் திட்டப் பணிகளுக்கு ரூ. 200 கோடி
-இறக்குமதி சர்க்கரைக்கு ஓராண்டுக்கு வரி விலக்கு
-பாக்குமர இலை தட்டு, தொன்னை மீதான வரி ரத்து
-அரசு கல்லூரிகளில் எம்.ஏ, எம்.எஸ்.சி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து.
-புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் 4 அரசு கலை, 7 தொழில்நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
-மேலூரில் பாலிடெக்னிக் தொடங்கப்படும்.
-விழுப்புரத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு விரிவாக்க மையம் உருவாக்கப்படும்.
-மாணவர்களுக்கு ரூ. 10 கோடியில் ஆங்கில டிக்ஷனரி வழங்கப்படும்
-மதுரையில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
-ரூ. 68 கோடியில், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், ஈரோடு மாவட்டங்களில் படிக்கும் பாரதம் திட்டம்.
-2000 நடுநிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள் வழங்க ரூ. 50 கோடி ஒதுக்கீடு.
-5000 பள்ளிகளில் ரூ. 85 கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
-125 உயர் நிலைப் பள்லிகள் மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
-நகர்ப்புறங்களில் குடிசைகளை அகற்றி அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்ட ரூ. 300 கோடி
-200 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்
-ரூ. 120 கோடியில் 2000 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்.
-காவல்துறைக்கு ரூ. 2962 கோடி நிதி ஒதுக்கீடு.
- மிளகு, சீரகம், சோம்பு, பொடி வகைகளுக்கு வரி விலக்கு. பொடி வகைகளுக்கான மூலப் பொருட்களுக்கும், சோற்றுக் கற்றாழை மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கும் வரி விலக்கு
-தமிழகத்தில் தீவிரவாதம் தலையெடுக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
-சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்
-இலங்கையில் அரசியல் அதிகாரப் பகிர்வு விரைவில் ஏற்பட மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
-முகாம்களில் உள்ள தமிழர்கள் விரைவில் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்ப மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கூடுதலாக 4.5 லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யும் வகையில் ஏரிகள் புனரமைப்பு
-விவசாயிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட சுய உதவிக் குழுக்கள் சிறப்பாக செயல்படுகின்றன.
-முல்லைப் பெரியாறு அணை ஆய்வுக் குழுவை ஏற்பதில்லை என்ற தமிழக அரசின் முடிவில் மாற்றம் இல்லை
-உணவு மானியத்திற்கு ரூ. 3750 கோடி ஒதுக்கீடு.
-நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பெருக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு
-காவிரியில் கதவணை அமைக்க ரூ. 193 கோடி ஒதுக்கீடு
-நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ. 200 கோடி
-தாமிரபரணி, நம்பியாறு ஆறுகள் இணைப்புக்கு ரூ. 126 கோடி
-பரம்பிக்குளம், ஆழியாறு கால்வாயை சீராக்க ரூ. 127 கோடி
-ரூ. 439 கோடியில் ஏரிகள், குளங்கள் புனரமைப்புத் திட்டம்.
-ரூ. 609 கோடியில் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
-கோவை ஆவின் பால் பண்ணை நவீனமயமாக்கப்படும்.
-மாற்றுத்திறன் படைத்தோருக்காக முதல்வர் கருணாநிதி மேற்பார்வையில் தனித் துறை
-விவசாய சுய உதவிக் குழுக்களுக்கு உதவ ரூ. 10 கோடி சுழல் நிதி ஒதுக்கீடு.
2010-11ல் கூடுதலாக 10 ஆயிரம் விவசாய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்.
-விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்வாரியத்திற்கு ரூ. 295 கோடி மானியம்.
-2010-11ல் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ. 140 கோடி
-கரும்பு விவசாயிகளுக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ. 50 உயர்த்தப்பட்டு ரூ. 1650 மற்றும் அரவைக் கூலி மற்றும் போக்குவரத்து செலவு உள்பட ரூ. 2000 ஆக வழங்கப்படும்.
-செம்மை நெல் சாகுபடித் திட்டம் 6.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படும்.
-சன்னரக நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ. 1,100 வழங்கப்படும்
-சொட்டு நீர்ப்பாசனத் திட்டம் 77,000 ஏக்கர் நிலத்தில் விரிவுபடுத்தப்படும்.
-விவசாயிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 891 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது
-இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ. 2,500 கோடி பயி்ர் கடன் வழங்கப்படும்
-பட்ஜெட்டை படிக்க ஆரம்பித்தார் நிதியமைச்சர் அன்பழகன்
-அதிமுக எம்எல்ஏக்கள் எதி்ர்கோஷம்
-அவையில் அமைதியாய் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் வெளியேற வேண்டும் என்று சபாநாயகர் ஆவுடைப்பன் எச்சரிக்கை