மேலவை தொகுதி வரையறை வெளிப்படையானதாக இருக்க வேண்டும்: ஜெயலலிதா

அதில் அவர் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் சட்ட மேலவை அமைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் அளிக்கப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் கேட்ட பிறகு தேர்தல் கமிஷன் தொகுதி வரையறை திட்டத்தை முன்வைத்துள்ளது.
கடந்த 28ம் தேதி இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கூட்டிய கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்றன.
எங்களுக்கு அளிக்கப்பட்ட விவரங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள் தொகுதிகளை உருவாக்க மக்கள் தொகையை ஒரு காரணியாக எடுத்துக்கொண்டதற்கான சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை என்பதை முதலில் குறிப்பிட விரும்புகிறேன்.
அரசியல் சாசனத்தின் 171வது பிரில் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட பிரிவினரால் மேலவைக்கான ஒவ்வொரு குறிப்பிட்ட தொகுதியும் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதன் மூலம் உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் குறிப்பிட்ட பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட அரசியல் சாசனம் வழி வகை செய்துள்ளது.
ஜனநாயகமயமாக்கலுக்கு இந்த வழிமுறையை பின்பற்றுவது அவசியம். இல்லையென்றால் விதிமுறைகளை மீறியதாகிவிடும்.
எனவே உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டதாரிகள், ஆசிரியர்களுக்கான தொகுதியை நிர்ணயிக்க பொது மக்கள் தொகையை ஒரு அளவாக எடுத்துக் கொள்வதை தவறு என கருதுகிறேன்.
மாவட்ட வாரியான உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டதாரிகள், ஆசிரியர் களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்வதே சரியாக இருக்கும். மேலவைக்கான தொகுதிகள் உருவாக்கப்படுவது முற்றிலும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும்.
இந்த திட்டமானது அரசிதழில் வெளியிடப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். அனைத்து தொகுதிகளும் நடைமுறை சார்ந்ததாக மற்றும் சமமானதாக இருப்பது மிகவும் அவசியம். பூகோளரீதியாக சமமானதாக இருக்க வேண்டும்.
எனவே பூகோள விவரங்கள் மற்றும் நிர்வாக எல்லைகள் அடங்கிய விரிவான வரைபடத்தை வெளியிடுவது அவசியம். தொகுதி வரையறை நகலானது மக்களவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரிடம் வழங்கப்பட்டு கருத்துக்கள் கேட்டறியப்பட வேண்டும். பொது மக்கள் பார்வைக்கும் வைக்கப்பட வேண்டும். பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க குறைந்தபட்சம் 2 மாத காலம் அவகாம் அளிக்கப்பட வேண்டும்.
பொது மக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், பட்டதாரிகள், அறிவாளிகள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். இதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவையும் தேர்தல் கமிஷன் நியமிக்கலாம்.
அரசியல் சார்பில்லாத ஒருவரை இதற்கு தலைவராகவும் நியமிக்கலாம். தொகுதி மறுவரையறை அவசரத்தில் மேற்கொள்ளப்படக் கூடாது.
இது சமுகத்தின் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள் ஆகியோரின் கணக்கு அடிப்படையில் மறுவறை இருக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களை அறிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார். இதன் நகலை தேர்தல் கமிஷனர் சம்பத் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார் ஜெயலலிதா.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications