For Daily Alerts
Just In
பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கு பிரதமர் ஆஜராக பிரணாப் எதிர்ப்பு
இதுதொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடாளுமன்றத்திற்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவர் பிரதமர். ஆனால் நாடாளுமன்றம் அமைத்த ஒரு கமிட்டிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.
என்னைக் கேட்டால், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பொதுக் கணக்குக் குழு முன்பு பிரதமர் ஆஜராகக் கூடாது என்றுதான் யோசனை தெரிவிப்பேன். இது அவசியமற்றது என்றார் பிரணாப்.
சமீபத்தில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தான் பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராகத் தயார் என்று அதிரடியாக அறிவித்தார் பிரதமர். மேலும், சமீபத்தில் இதுதொடர்பாக அவர் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கும் கடிதம் எழுதியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
Comments
English summary
Senior Congress leader Pranab Mukherjee at a press conference in Kolkata has exprresed his difference of opinion on the PM Manmohan Singh's offer to appear before Parliamentary Accounts Committee (PAC) in the 2G scam. Pranab said he would have definitely advised him against it if his opinion was sought.
Story first published: Sunday, January 2, 2011, 17:23 [IST]