For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 நாள் தொடர் சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

By Shankar
Google Oneindia Tamil News

Mumbai Stock Exchange
மும்பை: அமெரிக்க - ஐரோப்பிய பொருளாதார நெருக்கடிகளால் கடந்த ஆறு தினங்களாக தொடர் சரிவுக்குள்ளான இந்தியப் பங்குச் சந்தைகள் இன்றுதான் சாதகமான நிலைக்குத் திரும்பின.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை எடுத்த எடுப்பில் 400 புள்ளிகள் உயர்வு கண்டது. நிப்டியில் 107 புள்ளிகள் உயர்ந்தது.

ஆனால் பிற்பகலில் இந்த நிலையில் கொஞ்சம் மாறுதல் இருந்தது. பிற்பகல் 2 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 320.69 புள்ளிகள் உயர்ந்து 17,178.60 ஆக இருந்தது. நிப்டி 102 புள்ளிகளை கூடுதலாகப் பெற்று 5,174.95 ஆக இருந்தது.

டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, மகிந்திரா அண்ட் மகிந்திரா, இன்போஸிஸ், டிஎல்எப் மற்றும் டிசிஎஸ் பங்குகள் நல்ல லாபத்தில் கைமாறின.

ஆசியாவின் இதர பங்குச் சந்தைகள் ஹாங்காங், கொரியா, ஷாங்காய், தைவான் போன்றவற்றிலும் இன்று சாதக நிலை திரும்பியிருந்தது.

English summary
Snapping a six-session losing streak, the BSE benchmark Sensex was up by 323 points in early trade today due to fresh buying in IT, realty, consumer durable, auto and metal stocks on the back of higher Asian cues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X