சல்மான் குர்ஷித் மீது குடியரசுத் தலைவரிடம் தேர்தல் ஆணையம் புகார்
டெல்லி: தேர்தல் நடத்தை விதிகளை தொடர்ந்து சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மீறி வருவதாக குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு தேர்தல் ஆணையம் புகார் மனு அளித்துள்ளது.
உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் தொடர்பாக சல்மான் குர்ஷித் பேசினார்.
சட்ட அமைச்சராக இருந்து கொண்டு சல்மான் குர்ஷித் இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகவும் இனி அத்தகைய மீறல்களை அவர் செய்ய மாட்டார் என்று தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்திருந்தது.
ஆனால் தேர்தல் ஆணையம் என்னை தூக்கில் போட்டாலும் தொடர்ந்து சிறுபான்மையினர் உரிமைக்காக குரல் கொடுப்பேன் என்று சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்தது.
மேலும் உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும்வரை குர்ஷித் உள்ளே நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியது.
அரசியல்சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் சல்மான் குர்ஷித்தை சட்ட அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் மன்மோகன்சிங் நீக்க வேண்டும் என்றும் பாஜக கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை சல்மான் குர்ஷித் தொடர்ந்து மீறி வருவது குறித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.
அந்த கடிதத்தில், தேர்தல் நடத்தை விதிகளுக்கு சல்மான் குர்ஷித் பணிய மறுப்பதாகவும், அவருடைய பேச்சின் தொனி தேர்தல் ஆணையத்தின் சட்டபூர்வ உத்தரவை அவமதிப்பாக உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
சல்மான் குர்ஷித் மீது குடியரசுத் தலைவர் உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ள தேர்தல் ஆணையம், குர்ஷித்தின் முறையற்ற நடவடிக்கை, அரசியல் சட்ட அதிகார அமைப்புகளுக்கு இடையேயான பணியில் ஊறு விளைவிப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளது.
சல்மான் குர்ஷித் மீது மேற்கொள்ள இருக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தேர்தல் ஆணையம் வரும் திங்கள்கிழமை முடிவு செய்யும் என்று தெரிகிறது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications