நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு: கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானன்ந்தனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரண
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரள மாநில முதல்வராக இருந்த போது நிலம் ஒதுகீட்டில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் போலீசார் இன்று அச்சுதானந்தனிடம் விசாரணை நடத்தினர்.
2001-06ஆம் ஆண்டு முதல்வராக இருந்தபோது அச்சுதானந்தன், தமது உறவினர் சோமன் என்பவருக்கு சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கினார் என்பது புகார்.
இது தொடர்பாக 2-வது முறையாக அச்சுதானந்தனிடம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் ஏற்கெனவே கோழிக்கோடு நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் அச்சுதானந்தன் மீதான வழக்கில் அச்சுதானந்தனின் முன்னாள் செயலர் ஷீலா தாமஸ் உள்ளிட்ட 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலம் ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஏற்கெனவே உம்மன்சாண்டி தலைமையிலான அமைச்சரவை முடிவும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications