சத்துணவு பணியாளர்கள் நியமனம்: சிபாரிசு கடிதங்களை கடாசும் கலெக்டர் நந்தகுமார்
ராமநாதபரம்: சத்துணவு பணியாளர்கள் பணி நியமணத்தில் அரசியல்வாதிகளின் சிபாரிசு கடிதங்களைக் கொண்டு வரும் விண்ணப்பதாரர்களை கறுப்புப் பட்டியலில் வைக்க ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவுப் பணியாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணிக்கு ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளது என்று கூறப்படுகின்றது. இதில் எப்படியும் பணம் பார்த்துவிட வேண்டும் என துடித்த ஆளும் கட்சி நிர்வாகிகள் பலர், பயனாளிகள் மிகவும் ஏழ்மையானவர், சாப்பாட்டிற்குக் கூட வழி இல்லாதவர், பழைய கட்சி நிர்வாகி மகன், மகள் எனக் கூறி சம்பந்தப்பட்ட அமைச்சர், மாவட்டத்தில் உள்ள தொகுதிக்கு உட்பட்ட எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகளிடம், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அந்தப் பணியிடங்களை ஒதுக்கித் தர வேண்டும் எனச் சிபாரிசு கடிதம் வாங்கிவிட்டார்களாம்.
இதை கொடுத்தால் எப்படியும் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் பணி வழங்கிவிடுவார் என்று கணக்கு போட்டு அந்த சிபாரிசு கடிதங்களை கலெக்டரிடம் கொடுத்துள்னர். இந்த நிலையில் கலெக்டர் நந்தகுமார் அதிகாரிகள் அடங்கிய பல குழுக்களை அமைத்து விதவைகள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் என அரசு விதிப்படி முன்னுரிமை அளித்து 462 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
கல்வி தகுதி, வயது, திருமணம், குழந்தைகள் போன்ற பல தகுதிகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்களாம். அரசியல்வாதிகள் சிபாரிசுகளைக் கொண்டு வரும் விண்ணப்பதாரர்களை கறுப்புப் பட்டியலில் வைக்க நந்தகுமார் உத்தரவிட்டுள்ளாராம். இதனால் உற்சாகமான அதிகாரிகள் தகுதியானவர்களை உடனே தேர்வு செய்துவிட வேண்டும் என அதிவேகம் காட்டி வருகின்றார்களாம்.
நந்தகுமாரின் நேர்மையான நடவடிக்கையால் மகிழ்ந்துபோன பொது மக்கள் அவரை மனதாரப் பாராட்டி வருகின்றனர். நேர்மையான வழியில் செல்லும் நந்தகுமார் சாதனை படைப்பார் என்றாலும், அவர் ஆட்சியாளர்களின் சோதனைக்கும், கோபத்திற்கும் ஆளாக நேரிடுமோ என்று பொதுமக்கள் ஒரு புறம் அச்சம் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications