ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜேப்பியார்

சென்னையை அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள இந்தக் கல்லூரியின் கூடைப்பந்து உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை கட்டடத்தின் தூண் சரிந்து விழுந்ததில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 50 வட மாநிலத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதில் ஒடிஸ்ஸா, அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் 6 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலியாயினர்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கட்டடப் பொறியாளர்கள் ராஜ்குமார், அன்புரோஸ், மேஸ்திரி சதானந்தம், கல்லூரியின் இயக்குனரும் ஜேப்பியார் மருமகனுமான மரியவில்சன் ஆகிய 4 பேரை கைது செய்யது வேலூர் சிறையில் அடைத்தனர்.
அதே போல ஜேப்பியார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்தார். பயணம் செய்யும் நிலையில் ஜேப்பியாரின் உடல்நிலை இல்லை என்று டாக்டர்கள் கூறியதால், ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் அப்துல் மாலிக் மருத்துவமனைக்கே சென்றார். அவர் முன் ஜேப்பியார் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
ஆனாலும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறவும் மாஜிஸ்திரேட் அனுமதித்தார்.
இந்நிலையில் நேற்று மாலை காஞ்சிபுரம் எஸ்.பி. மனோகரன் தலைமையிலான போலீஸ் படை ஆம்புலன்சுடன் மருத்துவமனைக்கு வந்து ஜேப்பியாரை வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். இரவு 7.30 மணிக்கு அவர் வேலூர் சிறைக்கு ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டார்.
சிறை வாயிலில் வாகனம் நின்றது. அப்போது ஜேப்பியார் தன்னால் நடந்து செல்ல முடியாது ஸ்டிரெச்சர் வேண்டும் என்று கூறினார். இதற்கு சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் வீல் சேராவது வேண்டும் என்றார். அதற்கு விதிமுறைகள் இடம் பெறாது என்று சிறை அதிகாரிகள் கூறிவிட்டனர்.
இதையடுத்து ஆம்புலன்சில் இருந்து ஜேப்பியார் இறங்கி நடந்து சென்றார். வேலூர் ஜெயிலில் விசாரணை கைதிகள் இருக்கும் சாதாரண பிரிவில் ஜேப்பியார் அடைக்கப்பட்டார்.
இன்று காலை சிறையில் உள்ள மருத்துவமனைக்கு ஜேப்பியார் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்தனர்.
விபத்தின் மூலம் உயிர் இழப்பை ஏற்படுத்தியது, உயிர் இழப்புக்கு துணைபோனது என இரு பிரிவுகளில் ஜேப்பியார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எம்ஜிஆருக்கு மிக நெருக்கமானவராக இருந்த ஜேப்பியார் சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் உள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications