நாளை தேமுதிகவுக்கு வயசு 8: வறுமையை ஒழிக்க விஜயகாந்த் சூளுரை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தேமுதிக அரசியல் பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து தனது 7வது ஆண்டை நிறைவு செய்து 8வது ஆண்டை தொடங்குகிறது. நாம் நடந்து வந்த பாதை மேடு பள்ளங்களை கொண்டது என்றாலும், பல்வேறு அரசியல் சூழ்ச்சிகள் பல நேரங்களில் நம்மை காலை வாரி விட முயன்றாலும் அவற்றை எல்லாம் கடந்து இன்றைய தினம் தமிழ்நாட்டு மக்களின் நன் மதிப்பை பெற்ற எதிர்க்கட்சியாக விளங்குகிறோம்.
மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் மூலம் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டபோது பொதுமக்கள் சார்பில் எதிர்த்து போராடிய வரலாறு தேமுதிகவிற்கு உண்டு. ஆகவே தேமுதிக என்றும் மக்கள் பக்கம் இருந்து வருகிறது என்பதற்கு இவையே போதுமான சான்றுகளாகும்.
சாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவாக ஆக்கப்பூர்வமாக இயங்கி வரும் தேமுதிக தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியலை மட்டுமல்ல, அரசியலில் ஒரு புதிய பாதையையும் வகுத்து வருகிறது.
இந்த இயக்கம் நாளை (வெள்ளிக்கிழமை) தனது 8வது ஆண்டினை தொடங்குகிற நேரத்தில், எவ்வாறு இதுவரையில் ஓயாது, ஒழியாது கழக தோழர்கள் தங்கள் உழைப்பையும், உடைமைகளையும் ஈடுபடுத்தி வருகின்றனரோ, அதே போல மேலும் நம் மக்கள் பணி தொடரும் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேமுதிகவினர் கழக கொடியை ஏற்றியும், இனிப்புகளை வழங்கியும், ஏழைகளுக்கு நலப்பணிகள் செய்தும், கூட்டங்கள் நடத்தியும், கொள்கைகளை விளக்கியும் கழகத்தின் தொடக்க நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். ஏழைகளே இல்லாத நாடு என்ற நிலையை நம் நாடு எட்டிட அயராது பாடுபடுவோம் என்று இந்த நேரத்தில் சூளுரை மேற்கொள்வோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications