வாடிய பயிரைப் பார்த்த கடலூர் விவசாயி மாரடைப்பில் மரணம்
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, தண்ணீரின்றி காய்ந்து போன நெற்பயிர்களைப் பார்த்த விவசாயி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அடுத்த, பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்தவர், சக்கரவர்த்தி, 45. தனக்குச் சொந்தமான அரை ஏக்கர் நிலத்திலும், குத்தகை மூலம், ஒரு ஏக்கர் நிலத்திலும் நெல் பயிரிட்டிருந்தார். நன்றாக செழித்து வளர்ந்த பயிர்கள் கடந்த சில நாட்களாக தண்ணீர் இன்றி வாடின. இதைக்கண்ட சக்ரவர்த்தி கவலைப்பட்டார்.
இந்தி நிலையில் நேற்று காலை வயலுக்குச் சென்று பார்வையிட்டார் சக்ரவர்த்தி. அங்கே வயல்பகுதி வெடித்தும் நெற்பயிர்கள் கருகியும் காணப்பட்டன. இதனால் மனம் நொந்த சக்ரவர்த்திக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே நிலத்திலேயே சுருண்டு விழுந்து மரணமடைந்தார். அப்போது அங்கு வந்த சிலர் சக்ரவர்த்தியின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்து வந்தனர்.
ஏற்கனவே தண்ணீர் இன்றி பயிர்கள் வாடியதைக் கண்ட நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications