போராட்டம் நடத்திய கைதிகளை அறைக்குள்ளேயே அடைத்து வைத்த கோவை சிறை நிர்வாகம்!
கோவை: கோவை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபடுவதால் குண்டர் சட்ட கைதிகளை அறைகளை விட்டு வெளியே விடாமல் பூட்டியே வைத்தும் உறவினர்களை சந்திக்க தடை விதித்தும் சிறை நிர்வாகம் தண்டனை கொடுத்திருக்கிறது.
கோவை சிறையில் முதலாவது பிளாக்கில் 80 குண்டர் சட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த பகுதியில் சிறை வார்டன்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சந்தோஷ் என்ற கைதி தமக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி வெளியே சிகிச்சைக்கு அனுப்பக் கோரியிருக்கிறார். ஆனால் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் சிறை வார்டர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் வார்டர் ஒருவர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து கைதிகளை வார்டர்கள் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர்.
இதனால் தங்கராஜ், சந்தோஷ், வேலுசாமி உள்ளிட்ட கைதிகள் சிறை கட்டிடத்தின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இவர்கள் நீண்ட நேரம் போராட்டம் நடத்தினர். பின்னர் துணை கமிஷனர் சுகுமாரன் கைதிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் குண்டர் சட்ட கைதிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு தண்டனையாக இன்று அவர்கள் அடைக்கப்பட்ட அறைகளில் இருந்து திறந்து விடவில்லை. அனைவருக்கும் சாப்பாடு அந்த பிளாக்கிலேயே வழங்கப்பட்டது. தண்டனைக் காலம் முடியும் வரை உறவினர்களைப் பார்க்கவும் அவர்களுக்கு தடை விதித்திருக்கிறது சிறை நிர்வாகம்!
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications