திமுக ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலகத்துக்கு முறையாக அனுமதி பெறவில்லை: தமிழக அரசு புகார்
சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்துக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறவில்லை என்று பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.
புதிய தலைமைச் செயலகத்தை சிறப்பு மருத்துவமனையாக மாற்ற எதிர்ப்பு தெரிவிக்கும் மனு மீது பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு மீது தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் எம். சொக்கலிங்கம், துறைசார் நிபுணத்துவ உறுப்பினர் பேராசிரியர் ஆர். நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணை நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீதகிருஷ்ணன் ஆஜரானார்.
அப்போது, எந்தவொரு புதிய திட்டத்துக்கும் முதலில் கட்டுமானப் பணிக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற வேண்டும். கட்டுமானப் பணிகள் முடிந்த பின் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக மீண்டும் ஒருமுறை வாரியத்தின் அனுமதி பெற வேண்டும். ஆனால், புதிய தலைமைச் செயலகம் கட்ட முந்தைய ஆட்சியில் முறையாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறவில்லை என்றார்.
இதற்கு தீர்ப்பாய நீதிபதிகள், நீங்கள் மட்டும் எப்படி மருத்துவமனையாக மாற்றினீர்கள்? என்று கேள்வி எழுப்ப. அந்தக் கட்டடத்தின் சிறிய பகுதியில் மட்டுமே மருத்துவமனை செயல்பட்டது. மருத்துவமனையாக மாற்றும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தால், அவற்றை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும் இந்த மேல்முறையீடு அரசியல் உள்நோக்கம் கொண்டதும் என்றும் கூறினார்.
இந்த வழக்கின் விசாரணை இன்றும் நடைபெற்றது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications