ராகுல் காந்தியைத்தான் மக்கள் பிரதமராக்க விரும்புகின்றனர்: காங்கிரஸ்

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேற்று முன் தினம் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, உங்களை பிரதமராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், இது ஒரு கற்பனையான கேள்வி. அதுபோன்ற நிலை வரும்போது, உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
இதனால் 3-வது முறையாக மன்மோகன் சிங்குக்கு பிரதமராவதில் தயக்கமில்லை என்ற கருத்து எழுந்தது. மன்மோகன்சிங்கின் அரசியல் ஆசை நீடிக்கிறது என்று பாஜக விமர்சித்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையேயும் வெவ்வேறு கருத்துகள் வெளிப்பட்டு வருகின்றன. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி, லோக்சபா தேர்தல் நடக்கும்வரை மன்மோகன் சிங்தான் இந்தியாவின் பிரதமர். 2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு யார் பிரதமர் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களும் கட்சித் தலைமையும் சேர்ந்து முடிவு எடுப்பார்கள். ஆனால் ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் இதயத்தில் ராகுல்ஜி பிரதமராக வேண்டுமென்ற ஆசை இருக்கிறது என்றார்.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறுகையில், பிரதமரிடம் குறிப்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்த நிலை வரும்போது யோசிப்போம் என்று பதில் சொன்னார். பத்திரிகைகள் இதனை விதவிதமாக அர்த்தப்படுத்திக் கொள்கின்றன என்றார்.
மத்திய தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறுகையில், கற்பனையான ஒரு நிலை பற்றிய கேள்விக்கு பிரதமர் கூறிய பதிலை தேவையின்றி திரித்து புரிந்துகொள்ள வேண்டாம். அவர் சொன்ன கருத்துக்கு கூடுதலாகவோ குறைத்தோ எதையும் சொல்ல வேண்டியதில்லை. பிரதமரின் கருத்தை ஆராய்வது தேவையற்ற வேலை என்றார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications