கார்ட்டூன் மூலம் அவமரியாதை... சிஎன்என் ஐபிஎன் மீது ஜெ. அவதூறு வழக்கு
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை அவமரியாதை செய்யும் வகையில் கார்டடூன் செய்தியை வெளியிட்டது தொடர்பாக சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அரசு வக்கீல் ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது...
சி.என்.என்.- ஐ.பி.என். டி.வி.சேனல் 2.4.2013 அன்று முதல்வருடன் பேட்டி காண்பது போன்ற கற்பனையான செய்தி கார்ட்டுன் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியின் வர்ணணையாளர் சைரஸ் கோச்சா முதல்வர் ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்பது போலவும், அதில் கார்ட்டுனாக சித்தரிக்கப்பட்ட முதல்வர் பதில் அளிப்பது போலவும் இருந்தது.
அதில் முதல்வர், கருணாநிதியும் அவரது பிள்ளைகளும் தமிழ்நாட்டை குடும்ப சொத்தாக நடத்தி வருகின்றனர் என்று கூறுவது போலவும் அதற்கு சைரஸ் கோச்சா நீங்கள் தமிழ்நாட்டை எப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்பது போலவும், அதற்கு ஒரு முதலாளியைப் போல் என்று முதல்வர் பதில் அளிப்பதாகவும் காட்சிகள் இடம் பெற்று உள்ளது.
இந்த நிகழ்ச்சி வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் முதல்வருக்கு தீங்கு ஏற்படுத்தும் விதமாக ஒளி பரபரப்பு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியால் முதல்வருக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே சி.என்.என்.- ஐ.பி.என். டி.வி.சேனல் இயக்குனர் விஜயகுமார், நிகழ்ச்சி தொகுப்பாளர் சைரஸ் கோச்சா, இந்த நிகழ்ச்சியை எழுதிய ஆசிஸ் சக்யா ஆகியோர் மீது கிரிமினல், அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications