அனைத்து துறைகளிலும் இந்திய பணியாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு!
கொழும்பு: இலங்கையில் கட்டுமானத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய பயணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இலங்கையின் முதலீட்டு சபையிடம் இந்திய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துதை நிறுத்த இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கிறது என்று அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், கட்டுமானத் திட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அவர்களுக்குப் பதிலாக உள்நாட்டில் பயிற்சி பெற்ற பணியாளர்களை இலங்கை அரசாங்கம் பணியில் ஈடுபடுத்த இருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் புதிய கொள்கைப் பிரகடனத்தின் படியே, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கட்டுமானத் திட்டங்களில் இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அடுத்து வரும் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் இந்தியப் பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது கணிசமாகக் குறைக்கப்படும். கொழும்பு டாக்யார்ட் நிறுவனத்தில் சுமார் 800 இந்தியப் பணியாளர்களும், உருக்கு தொழிற்சாலைகளில் 1500க்கும் அதிகமான இந்தியப் பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். இவர்களுக்குப் பதிலாக உள்நாட்டில் பயிற்சி பெற்றவர்கள் வேலைக்கு அமர்த்தப்படவுள்ளனர்.
முதலீட்டுத் திட்டங்களுக்கு, இந்தியப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதைக் குறைக்கும்படி, இலங்கை முதலீட்டுச் சபைக்கு இலங்கை அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது என்றார் அவர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications