இந்தியாவில் நாளை ரமலான் நோன்பு துவக்கம்; துபாயில் நோன்பு துவங்கியது

இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது. இன்று முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நோன்பு , ரமலான் பிறை நேற்று தென்படாத காரணத்தால், நாளை (வியாழக்கிழமை) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலையில் சஹார் வைத்து நோன்பு ஆரம்பிக்கும். அதிகாலை 4.17 மணிக்கு சஹார் நேரம் முடியும்.
சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நோன்பு நேரம் அதிகமாக இருக்கும். முதல் நோன்பு அதிகபட்சமாக 14 மணி நேரம் மற்றும் 43 நிமிடங்களைக் கொண்டதாக இருக்கும். இது படிப்படியாக நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குறைந்து கடைசி ரமலான் நோன்பு 14 மணி நேரம் மற்றும் 21 நிமிடங்களாக இருக்கும்.
இம்முறை ஐந்து வெள்ளிக் கிழமைகள் ரமலான் நோன்பில் இருக்க வாய்ப்புள்ளது. அதாவது, 29 வது நோன்பு நாளான ஆகஸ்ட் 8ம் தேதி வியாழக்கிழமை ரமலான் பிறை தென்படாமல் போனால், அடுத்த நாள் வெள்ளிக்கிழமை 30வது நோன்பு நாளாக கணக்கில் கொள்ளப்படும்.
துபாய் உள்ளிட்ட வளைகுடாப் பகுதிகளில் ரமலான் நோன்பு துவங்கியது:
அதே நேரத்தில் துபாய் உள்ளிட்ட வளைகுடாவின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (புதன்கிழமை) முதல் ரமலான் நோன்பு துவங்கியது.
இதனையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை துவங்கியது. துபாயில் தமிழக முஸ்லிம்கள் அதிகம் இருந்து வரும் தேரா குவைத் பள்ளி, கோட்டைப் பள்ளி, அஸ்கான் டி பிளாக் உள்ளிட்ட இடங்களிலும் சிறப்புத் தொழுகைகளில் அதிகமானோர் பங்கேற்றனர்.
தமிழக மக்கள் விரும்பி அருந்தும் நோன்புக் கஞ்சியினை துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள குவைத் பள்ளி மற்றும் இரண்டு பள்ளிகளில் ஈமான் அமைப்பு மூவாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோருக்கு தினமும் வழங்கவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளில் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி தலைமையில் துணைப் பொதுச்செயலாளர் ஏ முஹம்மது தாஹா, மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications