பள்ளி சத்துணவு கூடங்களில் அமைச்சர் வளர்மதி ரெய்டு- 3 பேர் சஸ்பென்ட்
சென்னை: பள்ளி சத்துணவு கூடங்களில் அசம்பாவிதங்கள் தொடரும் நிலையில் சென்னையில் இன்று அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 3 பணியாளர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, ஜார்ஜ் டவுன் மண்ணடி பகுதியில் உள்ள முத்தியால்பேட்டை மேல்நிலைபள்ளியின் சத்துணவுக் கூடத்தில் இன்று சத்துணவுத் திட்ட அமைச்சர் பா.வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ, மாணவியர்களிடம் உணவு சரியாக வழங்கப்படுகிறதா என்றும், தரமாக உள்ளதா என்றும் அமைச்சர் கேட்டறிந்தார்.

அப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டையின் எண்ணிக்கை, பயனாளிகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்ததை கண்டறிந்த அமைச்சர் அதற்கான விளக்கத்தினை சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளரிடம் கேட்டறிந்து, இனி வருங்காலங்களில் இதுபோன்று தவறுகள் நடக்கக்கூடாது என்று கடுமையாக எச்சரித்தார்.
மேலும், திருவெற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப்பள்ளியின் சத்துணவு மையத்தினையும் திடீரென ஆய்வு செய்த அமைச்சர், சத்துணவு மையம் குறித்த நேரத்தில் திறக்கப்படாமலும், சத்துணவு பணியாளர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வராததையும் கண்டார். இதனால் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications