"காவி" திகில் திட்டம்.. உடுப்பி கல்லூரியில் நடந்தது என்ன, எப்படி திரண்டார்கள் இந்துத்துவா மாணவர்கள்?
உடுப்பி கல்லூரியில் என்ன நடந்தது என்பது குறித்து புது தகவல் வெளியாகி உள்ளது
பெங்களூர்: உடுப்பி கல்லூரியில் காவி துண்டு மாணவர்களின் போராட்டம் தன்னிச்சையாக நடக்கவில்லை என்றும், அதை ஹிந்து ஜாக்ரண வேதிகே அமைப்புதான் தூண்டி விட்டு நடத்தியதாகவும் புது தகவல் வெளியாகி பரபரப்பை கூட்டி வருகிறது.
பள்ளி, கல்லூரிகளில் அனைவரும் ஒரே சீருடையை அணிய வேண்டும், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என இந்து அமைப்புகளை சேர்ந்த மாணவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், கர்நாடகாவில் பெரும் சர்ச்சை உருவாகியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு மங்களூரில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் பியுசி வகுப்பில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவர்கள் சிலர் பதிலுக்கு காவித் துண்டு அணிந்து வந்தனர்.

ஹிஜாப்
ஹிஜாப் அணிந்தால் காவி துண்டு அணிவோம் என்றும் இந்து மாணவர்கள் அதிரடியாக அப்போது அறிவித்தனர். இதைதொடர்ந்து பல கல்வி நிறுவனங்களிலும் இதேபோல சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தேறியது... குறிப்பாக உடுப்பி மாவட்டத்தின் மஹாத்மா காந்தி கல்லூரியிலும், ஹிஜாப் அணிய அனுமதிக்கக்கோரி மாணவிகள் போராட்டத்தில் இறங்கினர்... ஒரே கல்லூரி வளாகத்தில், ஒரே நேரத்தில் ஹிஜாப், காவித்துண்டுடன் 2 பிரிவாக மாணவர்கள் போராடி பதற்றத்தை கூட்டிவிட்டனர்..இன்னும் இந்த விவகாரம் முடியவில்லை.

போராட்டம்
இதனிடையே, உடுப்பியில் உள்ள எம்ஜிஎம் கல்லூரியில் காவித் துண்டு, தொப்பியுடன் மாணவர்கள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தியதன் பின்னணி குறித்து சில பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.. இந்த விவகாரத்தின் பின்னணியில் ஹிந்து ஜாக்ரக வேதிகே என்ற இந்து அமைப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள்தான் மாணவர்களுக்கு காவித் துண்டு, தலைப்பாகை ஆகியவற்றை சப்ளை செய்துள்ளனர்... போராட்டத்திற்குப் பிறகு இவர்களே அதை வந்து வாங்கிக் கொண்டும் போயுள்ளனர்.

ஹிஜாப்
கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மொத்தமாக திரண்டு வந்து, ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டபடி, ஹிஜாப் அணிந்து வந்த ஒரு இஸ்லாமிய மாணவியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதும், அந்தப் பெண் சற்றும் கலங்காமல், பயப்படாமல், அல்லாஹு அக்பர் என்று முழங்கிய காட்சியும் யாராலும் மறக்க முடியாதது... அந்த சம்பவம் நடந்தது உடுப்பியில் உள்ள எம்ஜிஎம் கல்லூரியில்தான்.

காவி துண்டு
இந்த காவி துண்டு மாணவர்களின் போராட்டம் தன்னிச்சையாக நடக்கவில்லை என்றும், அதை ஹிந்து ஜாக்ரண வேதிகே அமைப்புதான் தூண்டி விட்டு நடத்தியதாகவும் "தி நியூஸ் மினிட்" இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது... வேதிகே அமைப்புதான் மாணவர்களை போராட்டம் நடத்தத் தூண்டியது என்றும், வேதிகேதான் காவித் துண்டு, தலைப்பாகை ஆகியவற்றை சப்ளை செய்ததாகவும் தி நியூஸ்மினிட் தெரிவிக்கிறது.

மெசேஜ்
அதாவது போராட்டத்திற்கு 2 நாட்களுக்கு முன்பே எம்ஜிஎம் கல்லூரி மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் போராட்டம் குறித்து தெரிவித்துள்ளனர்... அந்த மெசேஜ் கன்னடத்தில் இருந்துள்ளது.. அதில், "ஹிஜாப் பிரச்சினை உடுப்பியில் உள்ள கல்லூரிகளில் சூடு பிடித்துள்ளது.. முஸ்லீம் மாணவர்கள் இதை சமூக வலைதளங்களில் பெரிதாக்கி வருகின்றனர். எம்ஜிஎம் கல்லூரியிலும் இந்தப் பிரச்சினை இருப்பதை அறிவோம். இந்த பிரச்சினைக்கு இந்த வருஷமே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்... அதனால் எல்லாரும் சேர்ந்து சீருடைக்கு ஆதரவாக போராட வேண்டியது அவசியம்.
Recommended Video

ஜெய் ஸ்ரீராம்
வரும் திங்கள்கிழமை எல்லா மாணவர்களும் காவித் துண்டுடன் கட்டாயம் வர வேண்டும்... உங்களது பைகளுக்குள் அதை வைத்திருங்கள்... போராட்ட ஏற்பாட்டாளர்கள் சொல்லும்போது அதை தோளில் அணிந்து கொண்டு கல்லூரிக்குள் வாருங்கள்" என்பது போல செய்தி நீள்கிறது.. செய்தியின் கடைசியில் ஜெய் ஸ்ரீராம் என்றும் எழுதியுள்ளனர்.. இந்த தகவல் வெளிவந்து மேலும் பரபரப்பை உடுப்பியில் கூட்டிக் கொண்டிருக்கிறது.. எனினும் அனைத்து சர்ச்சை சலசலப்புகளும் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கையுடன் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது...!
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications