சர்ச்சையில் கர்நாடகா சாமியார்.. சிறுமியை மடியில் தூக்கி வைத்து முத்தம்.. வெளியான வீடியோ
பெங்களூர்: கர்நாடகாவில் தன்னைத்தானே சாமியார் என்று கூறி கொள்ளும் ஒருவர் 7 வயது சிறுமியை தூக்கி தனது மடியில் வைத்து முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதையடுத்து அந்த சாமியார் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலம் யாதகிரி மாவட்டம் ஷாகாபூர் தாலுகா கோகி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வசித்து வருபவர் மல்லிகார்ஜுன முட்டவா.
இவர் தன்னை தானே சாமியார் என்று கூறி வருகிறார். இவர் அங்குள்ள கோவிலில் இருப்பதோடு, அங்கு வரும் மக்களுக்கு ஆசி வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தான் மகாராஷ்டிராவை சேர்ந்த தம்பதி தனது 7 வயது மகளுடன் சாமியார் மல்லிகார்ஜுன முட்டவாவை பார்க்க வந்தனர். அவர்களுக்கு ஆசி வழங்கினார். இந்த வேளையில் 7 வயது சிறுமியை அவர் கொஞ்சியுள்ளார்.
முத்தம்
மல்லிகார்ஜுன முட்டவா மடியில் தூக்கி வைத்து முத்தம் கொடுத்துள்ளார். இதனை சிறுமியின் பெற்றோர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோவை பார்க்கும் பலரும் விமர்சனம் செய்தனர். சாமியார் மல்லிகார்ஜுன முட்டவா தவறான நோக்கத்தில் சிறுமியை மடியில் வைத்து முத்தமிட்டதாக கருத்து தெரிவித்தனர்.
சர்ச்சையான வீடியோ
இது சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக கர்நாடகா மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. மேலும் வீடியோவை ஆதாரமாக வைத்து சம்பந்தப்பட்ட மல்லிகார்ஜுன முட்டவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் செய்யப்பட்டது.
வழக்குப்பதிவு – நோட்டீஸ்
இந்த புகாரை தொடர்ந்து கோகி போலீசார் சாமியார் மல்லிகார்ஜுன முட்டவா மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி யாதகிரி போலீஸ் சூப்பிரண்ட் கூறுகையில், ''சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்துள்ளோம். தற்போது சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரித்து தகவல்களை பெற்றுள்ளோம். சாமியார் தவறு செய்யவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் சாமியாரை அவர்கள் தான் வீடியோ எடுத்துள்ளனர். ஆனால் வீடியோவில் சிறுமி தயக்கத்துடன் இருக்கிறார். இதுபற்றி குழந்தைகள் நல கமிட்டியிடம் ஆலோசனை செய்தோம்.அவர்கள் அறிவுரையின்படி வழக்குப்பதிவு செய்துள்ளோம்'' என்றார்.
சாமியார் விளக்கம்
இதுபற்றி சாமியார் மல்லிகார்ஜுன முட்டவா கூறுகையில், ''நான் சிறுமியை தவறான நோக்கத்தில் அணுகவில்லை. என்னுடைய மகள் போல் தான் முத்தம் கொடுத்தேன். இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்'' என்றார்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications