அட கொரோனா கிடக்குது.. தொழில்கள்தான் முக்கியம்.. மால், மதுபான கடைகளையும் திறக்கப்போறோம்.. எடியூரப்பா
பெங்களூர்: அட கொரானா கிடக்குது.. நாம நம்ம வேலையை ஆரம்பிப்போம் பாஸ்.. என்ற மோடில் இருக்கிறது கர்நாடக அரசு. முதல்வர் எடியூரப்பா அளித்த பேட்டியிலும் இதே தொனிதான் எதிரொலித்தது.
Recommended Video
இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு, பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அதற்காக பொருளாதார நடவடிக்கைகளை முடக்கி விட முடியாது. ஒரு பக்கம் கட்டுப்பாடு, மற்றொரு பக்கம் பொருளாதார நடவடிக்கைகள், என இரண்டையுமே செய்தாக வேண்டியுள்ளது என்றார் எடியூரப்பா.
ஏற்கனவே நேற்று 14 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தியது கர்நாடக அரசு. இப்போது அடுத்தகட்டத்திற்கு நகர்கிறது.

மத்திய அரசு திட்டம்
மே 3ஆம் தேதி தேசிய அளவில் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், அதன் பிறகு சிவப்பு மண்டல பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் ஊரடங்கை முழுமையாக தளர்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் முடிவை எதிர்பார்க்காமல், கர்நாடக அரசு இப்போது அந்த முடிவுக்கு வந்துவிட்டது என்பது எடியூரப்பா பேட்டியில் உறுதியாக தெரிகிறது.

தொழில் துவக்கம்
இதுவரை, சிவப்பு மண்டலப் பகுதிக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதித்து விட்டு, பசுமை மண்டலப் பகுதிகளில் தொழில்களை இயங்குவதற்கு கர்நாடக அரசு அனுமதித்தது. மே 4ஆம் தேதிக்குப் பிறகு சிவப்பு மண்டல பகுதியாக இருந்தாலும் கூட, அது கண்டைன்மெண்ட் பகுதியாக இல்லாவிட்டால் அங்கெல்லாம் தொழில்கள் தொடங்கவும், குறைந்த அளவு தொழிலாளர்களைக் கொண்டு பணிகளை நடத்திடவும் முடிவு செய்துள்ளது எடியூரப்பா அரசு.

பெங்களூர் நிலவரம்
கண்டைன்மெண்ட் பகுதியாக இல்லாவிட்டால் அங்கு, மால்கள், தியேட்டர்கள் போன்றவற்றை திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்குவது பற்றியும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூர் நகரப்பகுதி சிவப்பு மண்டலம் என்ற பிரிவின் கீழ் வருகிறது. இங்கு 24 கண்டைன்மெண்ட் பகுதிகள் உள்ளன. இது 34 வார்டு பகுதிகளில் உள்ளது.

எடியூரப்பா பேட்டி
இந்த பகுதிகளில் மட்டும் வழக்கமான பணிகளுக்கு தடை விதிக்கப்படும். மற்ற பகுதிகளில் தொழில்கள் வழக்கம்போல இயக்கப்படும். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டால் பெங்களூரில் கூட மால்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படும் என்று தெரிகிறது. மார்ச் 24ஆம் தேதி தேசிய அளவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அதற்கு 10 நாட்கள் முன்பாகவே, பெங்களூரில் மால்கள் மற்றும் தியேட்டர்கள் மூடப்பட்டன கர்நாடக அரசின் இந்த திட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறேன் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். அதேநேரம் மே 15ஆம் தேதி வரை பஸ்கள் மற்றும் மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு அனுமதி கிடைக்காது என்று கூறப்படுகிறது.

மத்திய அரசு அனுமதி
எடியூரப்பா இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தாலும், சென்னை, பெங்களூர் உட்பட 130 பகுதிகளை சிவப்பு மண்டல பகுதியாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே எடியூரப்பாவின் மற்ற திட்டங்களுக்கு மோடி அரசு ஒப்புதல் வழங்கினாலும், பெங்களூரில், லாக்டவுனை தளர்த்த அனுமதி கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவே கூறப்படுகிறது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications