"அடாவடி அண்ணாமலையை புறக்கணிப்போம்!" பத்திரிகையாளர்களை மிரட்டுவது கேவலம்: யுஎம்பிசி கண்டனம்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவரது அடாவடித்தனத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், அண்ணாமலையை பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகியது குறித்தும், அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதேபோல் அவர் கையில் கட்டி இருக்கும் விலை உயர்ந்த ரபேல் வாட்ச் குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை முன்வைத்தார்கள். ஆனால், அதற்கு முறையாக பதிலளிக்காமல், செய்தியாளர்களின் ஊடகங்களின் பெயரை கேட்டு அவர்களையும் ஊடகங்களையும் விமர்சித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

யுஎம்பிசி அறிக்கை
இந்த நிலையில் அண்ணாமலையின் செயல்பாட்டிற்கு பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் அடுத்தடுத்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது, "சென்னையில் இன்று (04.01.23) பாஜக தலைமை அலுவலகத்தில் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

பாஜகவே அழைத்தது
பாஜக மாநிலத் தலைமை அழைப்பு விடுத்ததன் பேரிலேயே பத்திரிகையாளர்கள் அந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். அப்போது, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத அண்ணாமலை, வழக்கம்போல் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசி உள்ளார்.

தரக்குறைவாக பேசிய அண்ணாமலை
எந்த தலைவராக இருந்தாலும், பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்புவது பத்திரிகையாளர்களின் உரிமை மற்றும் அது அவர்களின் கடமையும் கூட. அப்படி, தங்கள் கடமையை செய்த பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசுவதை அண்ணாமலை வழக்கமாக வைத்து உள்ளார். இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் பத்திரிகையாளர்களை அண்ணாமலை மிகவும் கீழ்த்தரமாக நடத்தியுள்ளார்.

பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல்
ஆனால், இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களை மிரட்டும் அளவிற்கு அண்ணாமலை சென்று உள்ளார். இதுதொடர்பாக, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் சார்பாக அண்ணாமலையை பாஜக அலுவகத்தில் நேரில் சந்தித்தபோது, "பத்திரிகையாளர்களை அப்படித்தான் நடத்துவேன். வேண்டுமென்றால் என்னுடைய செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.

மமதையில் பேசுகிறார் அண்ணாமலை
அண்ணாமலையின் இந்த கருத்தை அடாவடி மற்றும் ஆணவத்தின் உச்சம் என்றே மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கருதுகிறது. பத்திரிகையாளர்களும், பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களும் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற மமதையில் அண்ணாமலை இப்படி நடந்துகொள்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

இந்திய பிரஸ் கவுன்சிலில் புகார்
ஏற்கனவே, அண்ணாமலையின் கீழ்த்தரமான நடவடிக்கைகளை கண்டித்து, பத்திரிகையாளர்களை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. அத்துடன், பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அண்ணாமலைக்கு எதிராக இந்திய பிரஸ் கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

அண்ணாமலையை யுஎம்பிசி எதிர்கொள்வோம்
இந்த நிலையில், அண்ணாமைலை தொடர்ந்து இதுபோன்ற கேவலமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது, என்ன நடந்தாலும் ஊடகங்கள் தன்னை புறக்கணிக்காது என்ற அவருடைய தவறான எண்ணத்தையே காட்டுகிறது. ஆகவே, அண்ணாமலையின் இந்த மூன்றாம் தர நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் எதிர்கொள்ள வேண்டிய அனைத்து தளங்களிலும் எதிகொள்ளும் என்று உறுதியளிக்கிறோம்.

ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும்
ஒரு அரசியல் கட்சி தலைவருக்கான எந்த தகுதியும் இல்லாமல், தொடர்ந்து கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் அண்ணாமலையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது. அதேவேளையில், தொடர்ந்து பத்திரிகையாளர்களையும் அவர்கள் சார்ந்த நிறுவனங்களையும் தரக்குறைவாக பேசி வரும் அண்ணாமலையை, பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது." என்று குறிப்பிட்டு உள்ளது.
-
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?











Click it and Unblock the Notifications