1,31,457 பேர் குரூப் 1 தேர்வெழுத வரவில்லை! 3,22,414 பேர் விண்ணப்பித்தும் பாதிக்கு பாதி ஆப்சென்ட்!
சென்னை: தமிழகம் முழுவதும் குரூப் 1 தேர்வுக்கு 3,22,414 பேர் விண்ணபித்திருந்த நிலையில் 1,31,457 பேர் தேர்வெழுத வரவில்லை.
அனைத்து மையங்களிலும் சேர்த்தே 1,90,957 பேர் மட்டுமே குரூப் 1 தேர்வெழுத வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது வருகை சதவீதம் 59.23 மட்டுமே என அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு
சப் கலெக்டர், டிஎஸ்பி, கூட்டுறவு சங்க பதிவாளர், உதவி ஆணையர், உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் இன்று காலை குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் ஆர்வமுடன் விண்ணபித்திருந்தனர். அதன் படி 3,22,414 பேர் குரூப் 1 தேர்வுக்கு விண்ணபித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

92 பணியிடங்களுக்கு
92 பணியிடங்களுக்கு மூன்றே கால் லட்சம் பேர் போட்டி போட முன்வந்ததால் குரூப் 1 தேர்வு மிகுந்த கவனம் பெற்றதுடன் முக்கியத்துவமும் பெற்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 33 மையங்களில் தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், பறக்கும் படையின் சோதனைகளும் நடைபெற்றன. குரூப் 1 தேர்வுக்கு 3,22,414 பேர் விண்ணபித்திருந்த நிலையில் 1,31,457 பேர் தேர்வெழுத வரவில்லை என்பது தான் இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் ஆகும்.

பாதிக்கு பாதி
குரூப் 1 தேர்வுக்கு ஆர்வமாக விண்ணப்பித்துவிட்டு பாதிக்கு பாதி பேர் தேர்வெழுத வரவில்லை என்பது கவனம் ஈர்த்திருக்கிறது. இதனிடையே 59,23% பேர் மட்டுமே, அதாவது 1,90,957 பேர் மட்டுமே குரூப் 1 தேர்வெழுத வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை பேர் தேர்வு எழுத வராததற்கு காரணம், தேர்வில் வெற்றி பெறுவோமா மாட்டோமா என்ற ஊசலாட்டமான எண்ணமாக தான் இருக்கும் எனக் கருதப்படுகிறது.

எப்போது முடிவு?
குரூப் 1 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனிடையே குரூப் 1 தேர்வில் இடம்பெற்ற கேள்வித்தாளானது சிலருக்கு எளிமையானதாகவும் சிலருக்கு கஷ்டமானதாகவும் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications