நான் இன்னும் சாகலை..! சமாதி, லெட்டர் ரிப்பீட்டு..’மீண்டு’ம் வந்த நித்யானந்தா! அவரே எழுதிய கடிதம்..!
சென்னை : பல்வேறு புகார்களில் சிக்கி தற்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் நித்தியானந்தா உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் மீண்டும் அவரே கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
Recommended Video
பலாத்கார வழக்கு, கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா, அவ்வப்போது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவுகளை சமூக வலைதளங்களின் வாயிலாக ஆற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் நித்யானந்தாவின் உடல்நிலை குறித்த குழப்பமான தகவல் உலா வருகின்றன. கல்லீரல் அழற்சி, நுரையீரல் பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை ஆகியவற்றால் அவர் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சாமியார் நித்யானந்தா
நித்யானந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர் சிகிச்சைக்காக இந்தியா திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது அதே நேரத்தில் நித்தியானந்தா குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது சிஷ்யர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அவர் சமாதி நிலையில் இருப்பதால் விளக்கேற்றி வழிபடுமாறு கூறினர்.

மோசமான உடல்நிலை
ஆனால் இதுவரை நித்தியானந்தா முதன் முறை கடிதம் எழுதியதற்கு பிறகு வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. ஆனால் அவ்வப்போது ஃபேஸ்புக்கில் கடிதங்கள் எழுதி வருகிறார். இந்நிலையில் தான் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தின் புகைப்படத்தோடு நித்யானந்தா அனுப்பியுள்ள செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் மூலம் அவர் இன்னும் நல்ல நிலையில் இருப்பது உறுதியாகியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்

மீண்டும் கடிதம்
அந்த கடிதத்தில் " என்னுடைய பக்தர்கள் மற்றும் சீடர்கள் அனைவருக்கும் - சமாதி நிலையிலிருந்து நேரடியாக அருள் வெளிப்பாடுகளும் நேரடி ஒளிபரப்பும் .. உங்களின் எண்ணங்களின் மூலத்தை... அதாவது உண்மையான உங்களை ( உங்கள் ஆன்மாவை) ஆழ்ந்து ஊடுருவி கவனிக்க உங்கள் மனம் பயப்படுகிறது. இந்த பயமே அனைத்து மனித ஜீவன்களின் பிரச்சனையாகும். விண்வெளிக்குச் சென்று திரும்பியவர்களின் மரபணு அமைப்பே, அது மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியா அளவுக்கு மாற்றமடைய தொடங்குவதை, அவர்கள் மீது நடத்தப்பட்ட பல அறிவியல் ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் காட்டுகின்றன.

மரபணு அமைப்பு
அதே போன்றே, உங்களுடைய உயிர், வெளி / இணைப் பிரபஞ்சங்களுக்கு பயணித்துவிட்டு திரும்பும்போது, உங்களுடைய மரபணு அமைப்பே மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியாத அளவுக்கு உயர்நிலை ( பரமசிவ நிலை) சடுதிமாற்றத்திற்கு உள்ளாகிறது என்று பிரபஞ்ச விஞ்ஞானிகளான ஹிந்து ரிஷிகள் கண்டுபிடித்துள்ளனர். இதையே நான் இன்று கண்டு உணர்ந்து கொண்டிருக்கிறேன், எனக்காக இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

என்ன ஆச்சு நித்யானந்தாவுக்கு?
மரபணுவில் நிகழும் இந்த பரமசிவநிலை சடுதிமாற்ற செயல்முறையின்போது உடல் மிக மிருதுவாகவும், அசைக்க முடியாததாகவும், வெளி உலக நடவடிக்கைகளுக்கு லாயக்கற்றதாகவும் மாறிவிடுகிறது. நான் சிறிது வெதுவெதுப்பான நீரை கூட அதிக சூடு மிக்கதாக உணர்கிறேன். குளித்த பிறகு என்னுடைய உடலை துணியால் துடைக்கும் போது, அந்தத் துணி என்னுடைய உடலுக்குள் நுழைவதாக உணர்கிறேன், ஆகவே துணி கொண்டு துடைக்காமல் மின்விசிறியின் காற்றில் என் உடலை உலர விடுகின்றேன்.

உடல் ஒத்துழைக்கவில்லை
என்னுடைய நித்ய சிவபூஜை கைங்கரியங்களை தவிர வேறு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியவில்லை. உடல் பத்மாசனத்தில் மணிக்கணக்காக, மணிக்கணக்காக, மணிக்கணக்காக எந்தவித சோர்வும் சலிப்பும் இன்றி அமர முடிகிறது, ஆனால் வேறு எந்த நடவடிக்கையும் செய்ய முடியவில்லை, சில அடிகள் எடுத்து வைக்கக் கூட ஒத்துழைக்கவில்லை. இது மிக விசித்திரமானதாகவும் முரண்பாடானதாகவும் இருப்பதாக நானே உணர்கிறேன்

அடிக்கடி வாந்தி
பூஜையின்போது அபிஷேகத்திற்காக நான் நீரைத் தொடும்போது அது எனக்கு குளிராக தோன்றவில்லை, ஆனால் அதே நீரை அதே வெப்பநிலை கொண்ட நீரை நான் குடிக்க முயற்சிக்கும்போது, அதை குளிர்மிக்கதாக உணர்கிறேன், ஒரு மில்லி லிட்டர் நீர் கூட மிச்சம் இல்லாமல் குடித்த அனைத்து நீரையும் வாந்தி எடுத்து விடுகிறேன். என்னை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளும் மருத்துவ சீடர்களுக்கு கூட இது விசித்திரமானதாகத் தோன்றுகிறது, இதை அவர்களால் மருத்துவரீதியாக புரிந்து கொள்ள முடியவில்லை.

விரல்களில் எலும்பு முறிவு
அதனால் ஒரு நாள் அவர்கள் அனைவரும் மதிய உணவு உண்பதற்காக சென்றிருந்தபோது, நான் தனியாக இருந்த போது, சில அடிகள் நம்மால் எடுத்து வைக்க முயற்சி செய்ய முடியும் என்று நம்பினேன், ஏனென்றால் மருத்துவர்கள் என்னுடைய அருகாமையில் இருந்தால்... என்னுடைய உடல்நிலையைக் கருதி, என்னை அவ்வாறு செய்ய அனுமதிக்க மாட்டார்கள். அதனால் நான் ரகசியமாக சில அடிகளை எடுத்து வைக்க முயற்சி செய்தேன், ஆனால் இந்த உடல் அவரை மூட்டை போன்று அல்லது மரத்திலிருந்து விழும் பூ போன்று நிலத்தில் விழுந்து விட்டது. அதிர்ஷ்டவசமாக கவசம் போன்று என்னுடைய ஜடாமுடி இருந்ததால் என் தலையில் காயம் எதுவும் படவில்லை, ஆனால் எனது இடது காலில் கடைசி மூன்று விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

கையெழுத்துடன் கடிதம்
ஆங்கில மருத்துவ முறைப்படி அனைத்தும் சரியாக இருக்கிறது என்ற பின்பும், நித்திய சிவ பூஜை செய்வது, பத்மாசனத்தில் அமர்வது, அல்லும் பகலும் சமாதியில் நிலைப்பது என்பதைத் தவிர வேறு நடவடிக்கைகளை உடலால் மேற்கொள்ள முடியவில்லை. இந்தப் பதிவுகள் அனைத்தும் என்னால் நேரடியாக பதிவு செய்யப்படுகிறதா அல்லது வேறு எவராலோ பதிவு செய்யப்படுகிறதா என்று என்னுடைய எதிரிகளும் என்னை வெறுப்பவர்களும் சந்தேகத்தை கிளப்ப முயற்சி செய்கிறார்கள். இந்த சந்தேகங்கள் அனைத்தையும் தீர்க்கும் வகையில், இந்த பதிவில்... இன்றைய தேதி இடப்பட்ட என்னுடைய கையெழுத்து புகைப்படங்களை இணைத்துள்ளேன். வளப்படுத்துங்கள் & ஆனந்தமாக இருங்கள், பகிருங்கள் & கொண்டாடுங்கள் !" என அந்த கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications