பாமக ஜாதிக்கட்சி இல்லை! முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த அன்புமணி ராமதாஸ்! அடுத்தது என்ன?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி ஜாதிக்கட்சி இல்லை என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் சாதித் தலைவர் மட்டுமில்லை என்றும் இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ராமதாசும் ஒருவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாமக தலைவரான பிறகு அன்புமணி முன்னெடுக்கும் புதுமையான அரசியல் இனி அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

பாமக தலைவர்
பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை அனைத்து சமுதாய மக்களுக்காகவும் தொடங்கப்பட்ட கட்சி என்றும் பாமகவில் எல்லா மதங்களை சேர்ந்தவர்களும், எல்லா சாதியை சேர்ந்தவர்களும் இருப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பாமக எண்ணற்ற சாதனைகளை புரிந்தும், ஜாதிக்கட்சி என்ற குறுகிய வட்டத்தில் அடைத்து பார்க்கப்படுவது வேதனையாக உள்ளதாக தெரிவித்தார். இதேபோல் ராமதாஸை ஜாதித்தலைவராக மட்டும் பார்க்கிறார்கள் என்றும் தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.

தலைசிறந்த தலைவர்
இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ராமதாசும் ஒருவர் எனவும் பாமகவின் அடிப்படைக் கொள்கையே சமூக நீதி தான் என்றும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். அம்பேத்கரை பொறுத்தவரை அவர் உலகத் தலைவர் என்றும் ஆனால் அவரை ஒரு குறுகிய வட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் தலைவர் போல் இன்று ஆக்கியிருக்கிறார்கள் எனவும் வேதனைத் தெரிவித்தார்.

நிச்சயம் உடைப்போம்
பாமக ஜாதிக்கட்சி, ராமதாஸ் ஜாதித் தலைவர் என்று சில அமைப்புகள் சித்தரித்து ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பதாகவும் அதனை தாங்கள் உடைத்தெறிந்து கொண்டு வருவதாகவும் நிச்சயம் அதில் வெற்றிபெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் இந்தப் பேச்சு அரசியல் ரீதியாக மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

புதிய அரசியல்
பாமக என்றாலே அது வன்னியர் சமுதாய கட்சி என்ற ஒரு பிம்பம் உள்ள சூழலில், இனி அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் கட்சியில் பொறுப்புகள் வழங்கி புதிய அரசியலை அன்புமணி முன்னெடுக்க இருப்பது அவரது முதல் பேச்சிலேயே தெள்ளத் தெளிவாக புரிகிறது.
-
Election Exclusive: அன்னைக்கே சொன்னாரே அன்புமணி.. திமுகவில் சேலம் அருள்? ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை! அப்போ ராமதாஸ்? -
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications