அதிமுகவை உதறினார் திருநங்கை அப்சரா ரெட்டி.. மகளிர் காங். தேசிய பொதுச் செயலாளராக நியமனம்
Recommended Video

சென்னை: அதிமுகவில் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த பிரபல திருநங்கையும், பத்திரிகையாளருமான அப்சரா ரெட்டி அக்கட்சியை விட்டு விலகி விட்டார். காங்கிரஸில் இணைந்துள்ள அவருக்கு அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பதவியை ராகுல் காந்தி வழங்கியுள்ளார்.
பத்திரிகையாளர், சமூக சேவகர், டாக் ஷோ தொகுப்பாளர் என பல்வேறு முகங்கள் கொண்டவர் திருநங்கை அப்சரா ரெட்டி. தான் சார்ந்த சமூகத்திற்காக தொடர்ந்து களமாடி வருபவரும் கூட. இவருக்கு காங்கிரஸ் கட்சி புதிய பெருமையை கொடுத்துள்ளது. அப்சரா ரெட்டியை அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக ராகுல் காந்தி நியமித்துள்ளார்.

இதற்கு முன்பு அதிமுகவில் இருந்து வந்தார் அப்சரா ரெட்டி. மறைந்த ஜெயலலிதா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார் அப்சரா ரெட்டி. மேலும் ஜெயா டிவியில் ஒரு ஷோவையும் நடத்தி வந்தார். இந்த நிலையில் அதிமுகவை விட்டு விலகியுள்ள அப்சரா ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

கட்டுப்பெட்டியான குடும்பத்தில் பிறந்தவர் அப்சரா ரெட்டி. இளம் வயதில் அவரது உடலியல் மாற்றங்களை குடும்பத்தினரே வெறுத்து இவரை ஒதுக்கினர். பின்னர் இவர் தணிந்து பாலின அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு திருநங்கையாக மாறினார். ஆஸ்திரேலியாவில் படித்துள்ள அப்சரா ரெட்டி, பத்திரிகையாளராக, சமூக சேவகராக, பல்வேறு பிரச்சினைகளை கையில் எடுத்தும் போராளியாக வலம் வருபவர்.
அவருக்கு முதல் அங்கீகாரம் கொடுத்த கட்சி என்ற பெருமை ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் உண்டு. அதேசமயம், தற்போது தேசிய அளவில் அப்சரா ரெட்டிக்கும், அவர் சார்ந்த சமூகத்திற்கும் காங்கிரஸ் கட்சி புதிய கெளரவத்தைக் கொடுத்துள்ளது.
-
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications