சிபிஎம் அவசர செயற்குழு.. திடீரென என்ட்ரி கொடுத்த வைகோ.. திமுக கூட்டணியில் பரபரப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடில் இழுபறி நீடித்து வருகிறது. சிபிஎம் செயற்குழு நடந்து கொண்டிருந்த போது அங்கு மதிமுக வைகோ திடீரென வருகை புரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. திமுக மற்றும் அதிமுக 2 கூட்டணிகளிலும் தொகுதி பங்கீடும் தீவிரமடைந்து வருகிறது.

திமுக - சிபிஎம் கூட்டணி
திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைந்திருப்பதால், கடந்தமுறை போட்டியிட்ட தொகுதிகளை விட குறைவான தொகுதிகளை பெற்று கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறார்கள். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்பதற்காக எங்களுக்கு குறைவான தொகுதியை ஒதுக்குவது ஏற்க முடியாது என கூறி வருகிறார்கள்.
திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி இடையே நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை. கூடுதல் தொகுதி வேண்டும் என சிபிஎம் கட்சியும், கடந்தமுறை போட்டியிட்ட தொகுதிகளை விட குறைவான தொகுதியில் போட்டியிட வேண்டும் என திமுகவும் கூறி வருகிறார்கள். இதனால் கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
அவசர செயற்குழுவில் வைகோ
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகர் பகுதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி, சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அங்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென அங்கு என்ட்ரி கொடுத்தார்.
பரபரப்பு விளக்கம்
கூட்டணி குறித்து அவர் ஆலோசனை நடத்த சென்றதாக தகவல் வெளியானது. இதுகுறித்து வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் பேபியை சந்திக்கவேக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வந்தேன். அவர் என்னுடைய நீண்ட கால நண்பர். என் மீது அதிக எல்ல்லையற்ற அக்கறை கொண்டவர். அன்பானவர். எனவே இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் தான்.
இந்த அலுவலகத்தில் வைத்து நான் அரசியல் கேள்விகளுக்கு பதில் கூற மாட்டேன். நீங்கள் எது கேட்டாலும் சொல்ல மாட்டேன். தேர்தலுக்காக என்னிடம் பல கேள்விகளை கேட்பீர்கள் என்பது தெரியும். நான் எதுவும் சொல்ல மாட்டேன். நீங்கள் என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேன். எப்படி கேட்டாலும் பதில் இல்லை" என்று கூறி சென்றார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications