டீச்சர் ஆக ஆசையா? உடனே ஒரு அப்ளிகேஷனை போடுங்க - பி.எட். மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம்
சென்னை: தமிழ்நாட்டில் பி.எட் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 7 அரசு கல்லூரிகளும் 14 அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் இளநிலையில் கல்வியியல் (பி.எட்) படிப்புகளுக்கு 2,000க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன.
இதில் தமிழ்/உருது, கணிதம், ஆங்கிலம், பொருளியல், வணிகம், அரசியல் அறிவு ஆகிய பாடப்பிரிவுகளின் கீழ் பி.எட் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

விண்ணப்பப்பதிவு
இந்த நிலையில் நடப்பு 2022 - 2023 கல்வியாண்டிற்காக மாணவர் சேர்க்கை பணிகள் துரிதப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. இந்த 10 பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் படித்த மாணவர்கள் பி.எட். படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக நடைபெறும் இந்த விண்ணப்பப்பதிவு அக்டோபர் 3 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

எப்படி விண்ணப்பிப்பது?
http://www.tngasaedu.in என்ற இணையதள முகவரிக்கு சென்று பி.எட். படிப்புகளுக்காக விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிப்பதற்கு பொதுப்பிரிவினர் ரூ.500, பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

விருப்ப கல்லூரிகள்
இன்று மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளின் பட்டியலை குறிப்பிட்டு சான்றிதழை பதிவேற்றம் செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்கும் பணிகள் நிறைவடைந்த பிறகு அக்டோபர் 6 ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கலந்தாய்வு எப்போது
விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்டு உள்ள இணையதளத்தில் கல்லூரிகள், இடங்களின் எண்ணிக்கை விபரங்களை அறிய முடியும். தனியார் கல்லூரிகளில் சேர விரும்பு மாணவர்கள் அவற்றுக்கென இருக்கும் இணையதளத்தில் அணுகலாம். கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதற்கு தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்படுவார்கள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications