பாலகிருஷ்ண ரெட்டி நாளை மேல்முறையீடு.. தண்டனை நிறுத்தி வைப்பு
சென்னை: பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
1998ம் ஆண்டு ஓசூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது அரசு பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. காவல்துறை வாகனமும் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், பாலகிருஷ்ணரெட்டிக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் பதவி வகிக்கமுடியாது. இதனால் பாலகிருஷ்ண ரெட்டிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தீர்ப்பு குறித்து கருத்து கூறியுள்ள பாலகிருஷ்ண ரெட்டி, தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வேன், மேலும் போராட்டம் நடந்த இடத்தில் நான் இல்லை என்று தெரிவித்துள்ளார். தீர்ப்புக்கு எதிராக நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
பாலகிருஷ்ண ரெட்டி முறையிட்டதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்திவைத்துள்ளது. ஒரு மாதத்திற்குள் உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் பேருந்து கல்வீச்சு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதால் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவியில் தொடர முடியாத நிலை உள்ளது. அமைச்சர், எம்.எல்.ஏ பதவியில் நீடிக்க முடியாத நிலையே உள்ளதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications