நெருங்கும் தீபாவளி.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு வெளியாகுமா? சொந்த ஊருக்கு செல்வோர் எதிர்பார்ப்பு
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்கு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு முன் பதிவில்லாத ரயில்கள் இயக்கப்படுமா என்று பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. முன்பதிவு செய்யப்படும் சிறப்பு ரயில்களையும் அறிவிக்க வேண்டும் என்றும் சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட விரும்பும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பண்டிகைகளை சொந்த ஊரில் கொண்டாடினால்தான் சந்தோஷம். அதுவும் தீபாவளி, தை பொங்கல் பண்டிகைகளை சொந்த ஊரில் கொண்டாடவே பலரும் விரும்புவார்கள். வேலை செய்யும் இடங்களில் இருந்து அடித்து பிடித்து பஸ், ரயில்களில் சொந்த ஊர் செல்வார்கள்.
தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி திங்கள்கிழமை அன்று வருகிறது. ஆகவே 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்றே சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய பலரும் திட்டமிட்டுள்ளனர்.

ரயில் டிக்கெட்டுகள்
தென்மாவட்ட விரைவு ரயில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் திருநெல்வேலி, நாகர்கோவில் , கன்னியாகுமரி, செங்கோட்டை, மதுரை விரைவு ரயில்களில் காத்திருப்பு பயணி பட்டியலில் 220 முதல் 320 பேர் வரைக்கும் உள்ளார்கள்.

ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட பல மடங்கு கட்டிடம் உயர்த்தி வசூலிக்கப்படுகின்றன. இதனால் சிறப்பு ரயில்களையே பயணிகள் பெரிதும் நம்பி இருக்கின்றனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் இன்னும் சிறப்பு ரயில்கள் அறிவிக்காதது பயணிகள் இடையே ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

சிறப்பு ரயில்கள்
சிறப்பு ரயில்களையே பயணிகள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்ற நிலையில் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டும். எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோயிலுக்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.
எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரயில் பயணிகள் கூறியுள்ளனர்.

விரைவில் வெளியாகும்
தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தென்னக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். விரைவு ரயில்களின் காத்திருப்பு பட்டியலை கணக்கிட்டு, கூடுதல் பெட்டிகள் இணைப்பது, முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவது என, நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, தென் மாவட்டங்கள், கோவை வழி தடத்தில் சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications