நம்பிக்கையை இழக்காத தினகரன் அணி... தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆயத்தம்
Recommended Video
சென்னை: தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வரும் 30-ஆம் தேதி மேல்முறையீடு செய்யவுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்டதாக தினகரன் அணியை சேர்ந்த 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 18 பேரும் வழக்கு தொடுத்தனர்.
மாறுப்பட்ட தீர்ப்பு
இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியிருந்தார். ஆனால் நீதிபதி சுந்தரோ தகுதி நீக்கம் செல்லாது என கூறியிருந்தார்.
சபாநாயகர் முடிவில்
இந்த மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு 3-ஆவது நீதிபதியான சத்தியநாராயணா அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதன் தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வந்தது. அப்போது நீதிபதி தீர்ப்பு வழங்குகையில் சபாநாயகர் முடிவில் எந்த தவறும் இல்லை.
தடை
எனவே 18 பேரையும் தகுதிநீக்கம் செய்வது என்ற சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தெரிவித்திருந்தார். அதே வேளை இடைத்தேர்தல் நடத்த விதிகிக்கப்பட்டிருந்த தடையையும் அவர் நீக்கினார்.
உச்சநீதிமன்றத்தில்
இதையடுத்து இடைத்தேர்தலை சந்திப்போம் என்றும் அதில் நிச்சயம் வெற்றி காண்போம் என்றும் தினகரன் அணியினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளனர்.