அமமுக கூட்டணியும் உடைந்தது- தேமுதிக தனித்துப் போட்டி!
சென்னை: 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. வடதமிழகத்தில் 7 மாவட்டங்களிலும் தென்தமிழகத்தில் 2 மாவட்டங்களிலும் இந்த தேர்தல் நடைபெறுகிறது.
திமுக கூட்டணியில் மாவட்ட நிர்வாகங்களே இடப் பங்கீடு குறித்து முடிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுக்கு குட்பை சொல்லிக் கொண்டிருக்கிறது திமுக மாவட்ட நிர்வாகங்கள்.

பாமக தனித்து போட்டி
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க. திடீரென தனித்துப் போட்டி என அறிவித்தது. பாமகவைப் பொறுத்தவரையில் வட தமிழகத்தில் அதிக இடங்களில் போட்டியிட விரும்பும்; ஆனால் அதிமுகவோ தங்களைவிட கூடுதல் இடங்களை பாமகவுக்கு தரப்போவது இல்லை. இதனால்தான் பாமக தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது.

தேமுதிக தனித்து போட்டி
இதனிடையே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்திருந்த தேமுதிகவும் தற்போது தனித்துப் போட்டியிடுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிகவுக்கு வட தமிழகத்தில் சற்று செல்வாக்கு இருக்கிறது. இந்த தேர்தலில் கட்சியின் இருப்பை தேமுதிக காட்டியாக வேண்டியிருக்கிறது.

விஜயகாந்த் அறிக்கை
இதனால்தான் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2021 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. போட்டியிடுகிற விரும்புகிற அனைத்து நிர்வாகிகளும் தொன்டர்களும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனுக்களை நாளையும் நாளை மறுநாளும் மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் கொடுக்கலாம். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் ரூ4,000; ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் ரூ2,000 கட்டணமாக செலுத்த வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.

திமுகவிடம் தேறாது
முன்னதாக திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறும் எனக் கூறப்பட்டது. ஏற்கனவே திமுக கூட்டணியில் இருக்கிற கட்சிகளுக்கே உள்ளாட்சி தேர்தலில் இடங்கள் இல்லை என்கிற நிலைமைதான் உள்ளது. இதனால் அங்கு போய் எதுவும் கிடைக்காமல் ஏமாறமல் இருக்க தனித்தே போட்டியிடுவோம் என்கிற நிலைப்பாட்டை தேமுதிக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications