அப்பாவு கோஸ்வாமி என இருந்தால்தான் நீதி கிடைக்குமா? ராதாபுரம் தேர்தல் வழக்கு குறித்து திமுக அப்பாவு
சென்னை: தம்முடைய பெயரும் அப்பாவு கோஸ்வாமி என இருந்தால்தான் நீதி கிடைக்குமோ? என ராதாபுரம் தேர்தல் வழக்கை சுட்டிக்காட்டி திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான அப்பாவு சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
2016 சட்டசபை தேர்தலில் ராதாபுரம் சட்டசபை தொகுதியில் திமுகவின் அப்பாவு போட்டியிட்டார். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அப்போதே இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் 203 தபால் வாக்குகளை எண்ணவில்லை என்பதை அப்பாவு சுட்டிக்காட்டி இருந்தார்.

மீண்டும் எண்ணப்பட்டன
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 3 சுற்றுகளில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையிலேயே இந்த வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன.

தடை கோரி வழக்கு
ஆனால் இந்த மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை தரப்பு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை; ஆனால் முடிவு வெளியிடத்தடை என புதிய உத்தரவை பிறப்பித்தது.

புதியதாக மனு
இவ்வழக்கு விசாரணை கடந்த 4-ந் தேதி விசாரணைக்கு வந்த போது மீண்டும் பிப்ரவரி 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை உடனே வெளியிட கோரி அப்பாவு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அப்பாவு கோஸ்வாமி என இருந்தால்..
இம்மனுவை தாக்கல் செய்த கையோடுதான் சமூக வலைதளங்களில், தேர்தல் வழக்குகள் ஆறு மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், 5 வருடங்கள் முடியும் தருவாயில் கூட எனது வழக்கில் நீதி கிடைக்கவில்லை!.. என் பெயர் அப்பாவு கோஸ்வாமி என இருந்தால் நீதி கிடைக்குமா? அர்னாப் கோஸ்வாமி வழக்கில் ஒரே வாரத்தில் உத்தரவிடும் உச்சநீதிமன்றம், எனக்கு மட்டும் ஏன் நீதி வழங்க தாமதப்படுத்துகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வடிவேலு பேச பேச திமுக அழிந்து போகும்.. வாய் ராசி அப்படித்தான் இருக்கு! அடித்துப் பேசிய செல்லூர் ராஜூ -
ராஜீவ் காந்தி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்த கனிமொழி.. திருச்சி மாநாட்டில் சம்பவம்! ஷாக்கில் உதயநிதி -
10 மாவட்டத்தில் திமுகவுக்கு ரெட் சிக்னல்.. கொங்கு நிலவரத்தால் சோகத்தில் அறிவாலயம்.. ஸ்டாலின் முடிவு! -
ஓபிசி கிரீமிலேயர்.. பெற்றோரின் சம்பளத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
திமுகவின் அடுத்த அதிரடி.. கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. கையெழுத்தான ஒப்பந்தம்! -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
6க்கு கீழ் குறைய கூடாது.. 5க்கு மேல் கொடுக்க முடியாது.. சிபிஎம், சிபிஐ-யிடம் கறார் காட்டும் திமுக! -
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
அடி தூள்! காலையில் கோரிக்கை.. மாலையே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.. பத்திரிகையாளர் பென்ஷன் உயர்வு! -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..!












Click it and Unblock the Notifications