பள்ளிக் கல்வி இயக்குநர் பதவி ரத்து.. ஐஏஎஸ் அதிகாரியை எளிதில் அணுக முடியாது.. கல்வியாளர்கள் எதிர்ப்பு
சென்னை: 150 ஆண்டுகளாக இருந்து வரும் பள்ளிக் கல்வி இயக்குநர் பதவியை ரத்து செய்திருப்பது எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பள்ளி கல்வி இயக்குனர் பதவியை நீக்கிய தமிழக அரசு அதற்கான பொறுப்புகளை துறை சார்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித் துறையை பொறுத்தவரை, அரசின் சார்பில் செயலர் செயல்படுவர்.
அவர்களின் கீழ் பல்வேறு பிரிவு இயக்குனர்கள் இயங்குவர். பள்ளி கல்வி இயக்குனர் என்ற பதவி மட்டுமே தலைமை பொறுப்பாக கருதப்படுகிறது. இந்த இயக்குனர் பதவி ரத்து செய்திருப்பது ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக் கல்வி
பள்ளிக்கல்வி இயக்குனருக்கான அதிகாரம் ஆணையரிடம் ஒப்படைக்கப்படுவது சரியானதா? என்பதற்கு மூத்த கல்வியாளர், ராஜ ராஜன் பேசுகையில், பள்ளிக்கல்வி நிர்வாகத்தை, பள்ளிக்கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர், தலைமை ஆசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர், மண்டலக் கல்வி அலுவலர் என அனுபவம் சார்ந்து படிப்படியாகப் பொறுப்பு உயர்வு பெற்றவர்கள் தான் பள்ளிக்கல்வி இயக்குனராக முடியும்.

பொறுப்பு
இவ்வாறான, நிர்வாகத் திறன் வாய்ந்த பொறுப்பினை ரத்து செய்து ஆணையராக மாற்றிருப்பது மிகத்தவறான முடிவாகும். பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக, பொறுப்புகளை பள்ளிக்கல்வி ஆணையரே மேற்கொள்வார் என்பது ஏற்புடையதாக இல்லை.

பரிந்துரை கடிதம்
மேலும் ஆணையராக இருந்தால், பரிந்துரை கடிதம், ஆசிரியர்கள், அதிகாரிகள், பணி நியமனம், பதவி உயர்வு, பென்ஷன், பணியிட மாற்றம் போன்றவற்றுக்கு, பள்ளி கல்வி இயக்குனரை சந்தித்து, பரிந்துரை கடிதம் பெறுவர். இனி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு இந்த அதிகாரங்கள் வருவதால், அவரை ஆசிரியர்கள் மற்றும் சங்கத்தினர் எளிதில் அணுக முடியாது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அனுபவங்கள்
இருப்பினும், பள்ளிக் கல்வி இயக்குனரால் எந்த முடிவுகளையும் விரைவாக எடுக்க முடிவதில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரி அனைத்து மண்டலங்களிலும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி விரைவாக முடிவுகளை எடுப்பார். இதற்காக துறைரீதியான அனுபவங்களைக் கொண்டவர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும் என்பது சரியானது இல்லை என்றாலும் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தவே இந்த முடிவை எடுத்துள்ளது. அரசின் முடிவு வரவேற்க்கத்க்கதாக பார்க்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications