ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..கூட்டணி தர்மம்..சொன்னது போலவே 23 பேருடன் களமிறங்கிய தமாகா யுவராஜா
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்காக வேலை செய்ய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமையில் 23 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. கூட்டணி தர்மத்திற்காகவும் வேட்பாளரின் வெற்றிக்காகவும் தலைமை சொன்னதை கேட்டு தொகுதியை விட்டுக்கொடுப்பதாக கூறிய யுவராஜா, தனது தலைமையில் உறுப்பினர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக இரு அணிகள், நாம் தமிழர்கட்சி, தேமுதிக என இப்போதைக்கு 4 முனை போட்டி நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம் இன்னமும் தனது நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை. அதே போல டிடிவி தினகரன் வரும் 27ஆம் தேதி தனது முடிவு கூறுவதாக தெரிவித்துள்ளார். அவர் தனது கட்சி சார்பில் வேட்பாளரை அறிவிப்பாரா? அல்லது தேமுதிகவிற்கு ஆதரவு தருவாரா என்பது அன்றைய தினம்தான் தெரியவரும்.

அதிமுகவில் இரு அணிகளிலும் வேட்பாளர் யார் என்று முடிவு செய்ய முடியாத நிலையில் உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுகவும் காங்கிரஸுக்காக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 11 அமைச்சர்களை உள்ளடக்கிய 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை திமுக அமைத்துள்ளது.
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரையில் தமாகா ஏற்கனவே போட்டியிட்ட தொகுதி. அதனால் தமாகா போட்டியிடக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் இம்முறை அதிமுக இபிஎஸ் அணி போட்டியிட விரும்புகிறது. இதனை தமாகாவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. தங்கள் அணி சார்பில் தனித்து களமிறங்குவோம் என ஓ.பன்னீர் செல்வம் கூறினாலும், பாஜக போட்டியிட்டால் ஆதரிப்போம் என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக 16 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை தமாகா தலைவர் ஜிகே வாசன் நேற்று நியமித்துள்ளார். இந்தக் குழுவில் கடந்த தேர்தலில் வெற்றியை இழந்த யுவராஜாவும் இடம்பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா தனது தலைமையில் 23 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமனம் செய்து அறிவித்துள்ளார். இந்த தேர்தல் பணிக்குழுவின் நிர்வாகிகள், பணியை சிறப்பாக மேற்கொள்வார்கள் என்று தமாகா இளைஞரணி சார்பில் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார் யுவராஜா. பேட்டியில் சொன்னது போலவே, கூட்டணி தர்மத்திற்காகவும் கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காகவும் பரபரப்பாக தேர்தல் பணியை செய்ய கிளம்பி விட்டார் யுவராஜா.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications