மீண்டும் கொரோனா ஊரடங்கு? ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில்... குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
சென்னை: மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அச்சம் காரணமாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பச் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்,
நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஐந்து நாட்களாகவே தினசரி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்தே பதிவாகி வருகிறது.
தமிழகத்திலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்
அதன்படி மாநிலத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், எங்கு மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

ரயில் நிலையம் முற்றுகை
குறிப்பாக, இந்த அச்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்தியில் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். கேரளாவிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அச்சம் இருப்பதால், கேரளாவில் இருந்து சென்னை வழியாகவும் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயன்று வருகின்றனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
இது குறித்துப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூறுகையில், வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனக் கூறுகின்றனர். அப்படி லாக்டவுன் அமல்படுத்தப்பட்டால், உணவு போன்ற அடிப்படை விஷயங்களைப் பெறுவது கூட கடினமாகிவிடும். அதற்கு முன் ஊர்களுக்குத் திரும்பிவிட வேண்டும் என்பதே எங்கள் ஆசை. கொரோனா பரவல் குறைந்த பின்னரே மீண்டும் வருவோம் என்று தெரிவித்தார்.

ரயில்கள்
கூட்டத்திற்கு ஏற்ற வகையில் தேவையான ரயில்கள் இயக்கப்படுவதை உறுதி செய்வதாகத் தென்னக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு திடீரென்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிலடங்காத பல துன்பத்தை எதிர்கொண்டனர். பல ஆயிரம் மக்கள் சாலை மார்க்கமாக நடந்தே சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். மேலும், வழியிலேயே பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழக்கும் துயர்மிகு சம்பவங்களும் நடைபெற்றது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications