உலகை திரும்பி பார்க்க வைத்த சண்முக சுப்பிரமணியன்.. ட்விட்டரில் சர்வதேச ஊடகங்கள் முற்றுகை
Recommended Video
சென்னை: சந்திரயான் -2 விக்ரம் லேண்டரின் சிதைந்த பகுதிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழரான சண்முக சுப்பிரமணியனின் ட்விட்டர் பக்கத்தில் சர்வதேச ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் அவரது பேட்டிக்காக முற்றுகையிட்டுள்ளனர்.
சந்திரயான் -2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சிதைந்த பகுதிகளை அமெரிக்காவின் நாசா ஆய்வு செய்து அவ்வப்போது படங்களை வெளியிட்டு வந்தது. இந்த படங்களை ஆராய்ந்த தமிழக பொறியாளர் சண்முக சுப்பிரமணியன், நாசாவுக்கு ஒரு இ மெயில் அனுப்பினார்.
அதில் விக்ரம் லேண்ட்ரனின் சிதைந்த பகுதிகளின் இருப்பிடம் குறித்து தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் ஆய்வு செய்த நாசாவும் விக்ரம் லேண்டரின் சிதைந்த பகுதிகளின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அதற்கு S என பெயரிட்டுள்ளதாக பிரகடனம் செய்தது.
தற்போது நாசாவுக்கே வழிகாட்டியாக இருந்த சண்முக சுப்பிரமணியனை ஒட்டுமொத்த உலகமும் வியப்புடன் திரும்பிப் பார்க்கிறது. சண்முக சுப்பிரமணியன் ட்விட்டர் பக்கத்தில் உலகின் முன்னணி ஊடகங்களின் மூத்த பத்திரிகையாளர்கள் அவரை தொடர்பு கொள்வது எப்படி? உங்களுக்கு இ மெயில் என்ன? எங்களுக்கு எப்போது பேட்டி தருவீர்கள்? என வரிசை கட்டி முற்றுகையிட்டு நிற்கின்றனர்.
சந்திராயன் 2.. ஆதி முதல் அந்தம் வரை.. எல்லாமே தமிழர்கள்தான்.. வியந்து பார்க்கும் வடஇந்தியா!