பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் பதவி... தென் மண்டலத்திற்கு கிரிஜா வைத்தியநாதன் வேண்டாம் -ஜவாஹிருல்லா
சென்னை: கிரிஜா வைத்தியநாதனை தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்திற்குப் பதிலாக வட மண்டல அல்லது மேற்கு மண்டல அமர்வில் உறுப்பினராக நியமிக்குமாறு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதற்கான காரணத்தை கூறி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு;

''பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் திருமதி கிரிஜா வைத்தியநாதனை நியமித்தது செல்லும்" என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
''ஒன்பது மாதங்கள் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளராகவும், 19 மாதங்கள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும், சுகாதாரத் துறைச் செயலாளராகவும் பணியாற்றியதைக் கருத்தில் கொண்டு கிரிஜா வைத்தியநாதன் பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராகத் தகுதி பெறுகிறார் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது அதிர்ச்சியை அளிக்கின்றது.''
''அரசு நிர்வாக ரீதியிலான பொறுப்புகளைக் கவனித்ததினால் மட்டுமே அவரை நிபுணத்துவம் பெற்றவராகக் கருத முடியாது என்ற பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வாதத்தைச் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது வேதனையை தருகின்றது.''
''கிரிஜா வைத்தியநாதன் தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம் தவறான முன்னுதாரணத்தைச் சென்னை உயர்நீதிமன்றம் காட்டியுள்ளது. நிர்வாக ரீதியாகப் பெற்ற அனுபவத்தை நிபுணத்துவமாகக் கருதுவது, யார் வேண்டுமென்றாலும் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்வதற்கு வழிவகுக்கும்.''
''இச்சூழலில் பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கிரிஜா வைத்தியநாதன் நிபுணத்துவ உறுப்பினராகப் பொறுப்பேற்றால் அவர் தலைமைச் செயலாளராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்படும் வழக்குகள் குறித்து முடிவு செய்யும் நிலை கிரிஜா வைத்தியநாதனுக்கு ஏற்படும்.''
''இது அறநெறி முறைகளுக்கு முரணாக அமையும். எனவே கிரிஜா வைத்தியநாதனை தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்திற்குப் பதிலாக வட மண்டல அல்லது மேற்கு மண்டல அமர்வில் உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.''
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications