முகிலன் கடத்தப்பட்டிருந்தாரா.. ஜெயக்குமாருக்கு நிருபர்கள் கேள்விக் கணை.. பதில் இதுதான்
Recommended Video
சென்னை: சமூக செயற்பாட்டாளர் முகிலன் விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை முடிவில் உண்மை தெரியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.
சென்னை கிண்டியில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
ராஜ்யசபாவிற்கு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவருக்கு எம்பி பதவி கொடுத்ததற்காக திமுக உள்நோக்கம் கற்பிக்கிறது. அவர்களும் இஸ்லாமிய சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுக்க மாட்டார்கள், அதிமுக கொடுப்பதையும் தடுக்க நினைக்கிறார்கள். திமுகவை போல நாங்கள் வாரிசுகளுக்காக, மன்னராட்சி நடத்தவில்லை. இங்கே உழைப்பவர்கள் உயர்வார்கள், என்றார்.

முகிலன் கண்டுபிடிக்கப்பட்டதில், தமிழக காவல்துறை தாமதமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுகிறதே, என்ற நிருபர்களின் கேள்விக்கு, நீங்கள் சொல்வது தவறு. என்ன நடந்தாலும் அதிமுக ஆட்சிதான் பொறுப்பு என்று குற்றம் சாட்டுவது வழக்கமாகிவிட்டது. அந்த அடிப்படையில்தான் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் ஆட்சி மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த விவகாரத்தில் நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. சிபிசிஐடி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று நீதிமன்றமும் தெரிவித்திருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முகிலன் கடத்தப்பட்டாரா என்ற நிருபர்களின் கேள்விக்கு, அது விசாரணை முடிவில்தான் தெரியவரும் என்றும் ஜெயக்குமார் பதிலளித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications