கணவரிடம் "கோரிக்கை மனு" கொடுத்த கிருத்திகா.. இன்னும் அதிரடி ஆக்ஷனில் இறங்காத உதயநிதி ஸ்டாலின்
சென்னை: எனக்கும் உதயநிதிக்கும் ஏதேனும் சண்டை வந்தால் அதை மகேஷ் அண்ணன்தான் பேசி சமாதானம் செய்வார் என மலரும் நினைவுகள் குறித்து கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் பிறந்தவர் கிருத்திகா. இவர் லயோலா கல்லூரியில் தனது விஸ்காம் படிப்பை முடித்தார். படிக்கும்போதே குறும்படங்களை எடுக்கும் ஆர்வம் கொண்டவர். இவர் 2013 இல் வந்த வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆனார்.
இவர் திருநங்கைகளின் வாழ்க்கை மேம்படுவதற்காக போராடி வருகிறார். இவர்களுக்காகவே stand by me என்ற ஆவண படத்தை தயாரித்துள்ளார். இவர் பேப்பர் போட் என்ற வெப் சீரிஸையும் இயக்கியுள்ளார். உதயநிதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரிடமும் மனைவி கிருத்திகாவிடமும் நிறைய செய்தி சேனல்கள் நேர்காணலை நடத்தி வருகின்றன.

கிருத்திகா
அந்த வகையில் கிருத்திகாவிடம் ஒரு சேனல் நடத்திய நேர்காணலில், நானும் உதய்யும் எங்கள் நண்பர்களுடன் ஊட்டி முதல் கேரளா வரை பல்வேறு இடங்களுக்கு ஒரே வேனில் கேங்காக சென்றுள்ளோம். அங்கு புதிய மக்கள், புதிய கலாச்சாரம், புதிய உணவு இவற்றை எல்லாம் பார்த்து மகிழ்ந்துள்ளோம். டிராவலிங் என்றால் எனக்கும் உதய்க்கும் மிகவும் பிடிக்கும்.

குழந்தைகளுடன் நேரம்
குழந்தைகளுடன் நேரத்தை செலவிட இருவருமே விரும்புவோம். ஆனால் எம்எல்ஏ ஆன நிலையில் உதயநிதியால் எங்களுடன் நேரத்தை செலவிட முடியவில்லை. அண்மையில் கூட ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்ல உதய்யை அழைத்தேன். அவர் தனக்கு வேலை இருப்பதாக சொல்லிவிட்டார். இதனால் நான் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்று வந்தேன்.

மக்களுக்கு சேவை
அப்போதுதான் மக்களுக்கும் சேவை செய் ஆனால் குழந்தைகளுடனும் நேரத்தை செலவிட வேண்டும். இரண்டையுமே பேலன்ஸ் செய்ய வேண்டும் என கோரிக்கையாக வைத்திருந்தேன். ஆனால் எனது கோரிக்கை இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. நானும் உதய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

சண்டை நிகழும்
காதலிக்கும் போது மெச்சூரிட்டி இல்லாததால் இருவருக்கும் அடிக்கடி சண்டை நிகழும். இருவரும் பேசிக் கொள்ள மாட்டோம். விஷயத்தை தெரிந்து கொண்டு அன்பில் மகேஷ் அண்ணன்தான் எங்களை சமாதானப்படுத்தி வைப்பார். இது போன்ற சங்கடமான நேரங்களிலும் உதவுபவர்கள்தான் நண்பர்கள். அந்த வகையில் உதயநிதிக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என கிருத்திகா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
இது போன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு பேட்டியில் கூறுகையில், என்னை உதயநிதி தொடர்பு கொண்டு உடனே ஒரு கோயிலுக்கு வா என அழைத்தார். நான் எதற்காக என கேட்டேன். அவர் நீ முதலில் வா என்றார். சரி என நானும் அவர் சொன்ன கோயிலுக்கு சென்றேன். அப்போது அங்கு ஒரு குழுவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்து கொண்டிருந்தது.

பாசத் தங்கை கிருத்திகா
உடனே உதயநிதி அதில் இருந்த ஒரு பெண்ணை பார்த்து, அந்த பெண்ணை நான் காதலிக்கிறேன், அவர் பெயர் கிருத்திகா என்றார். உடனே எங்களை பார்த்ததும் கிருத்திகா வெட்கப்பட்டு கொண்டே அந்த இடத்தை விட்டே ஓடிவிட்டார். அன்று முதல் இன்று வரை நிறம் மாறாமல் இருக்கும் பாச தங்கை அவர். எனது சொந்த தங்கையாகவே அவரை பார்க்கிறேன் என அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
-
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட் -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
"ப்ளீஸ் திருமா".. ஸ்டாலினின் அந்த வார்த்தை! மா.கம்யூனிஸ்ட்டால் விசிகவிற்கு விழும் அடி.. திமுக ‘செக்’ -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
சிபிஎம் அவசர செயற்குழு.. திடீரென என்ட்ரி கொடுத்த வைகோ.. திமுக கூட்டணியில் பரபரப்பு -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
டிபன்டர் காருடன் போஸ் கொடுத்த.. பிரேமலதா! திமுகவுக்கு தேவையில்லாத ஆணி.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு -
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி முதல் கல்வி கடன் ரத்து வரை! 2021ல் திமுக, அதிமுக கொடுத்த வாக்குறுதிகள்! -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளிப்படையாக சொன்ன திருமாவளவன்! ராமதாஸுக்கு வாழ்த்துகளாம்! -
மகளிர் உரிமை தொகை டூ விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் வரை.. 10 வாக்குறுதிகளை கொடுத்த மம்தா பானர்ஜி!












Click it and Unblock the Notifications