ஒரே நாளில் 2 தேர்வுகள்? தமிழக தேர்வர்களுக்கு அநீதி.. “வாசலையே அடைப்பதா?” - சு.வெங்கடேசன் ஆவேசம்!
சென்னை : எஸ்.எஸ்.சி தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கசேடன் மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
எஸ்.எஸ்.சி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள அதே நாளில் தமிழக கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் இருப்பதால், மாணவர்கள் ஏதாவது ஒரு தேர்வையே எழுதும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார் சு.வெங்கடேசன்.
ஏற்கனவே, மத்திய அரசு தேர்வுகளில் தமிழர்கள் நியமனம் பெறுவது வெகுவாக குறைந்துள்ள நிலையில், இப்போது வாசலையே இழுத்து மூடுவதா என சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை எம்.பி கடிதம்
தமிழக கல்லூரிகளில் முதுநிலை படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ள அதே நாளில் மத்திய பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக நடைபெற உள்ள தேர்வை தள்ளி வைக்கக் கோரி பணியாளர்கள் தேர்வு ஆணையம் மற்றும் இந்திய வானியல் துறைக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

எஸ்.எஸ்.சி தேர்வு
சு.வெங்கடேசன் எம்.பி எழுதியுள்ள கடிதத்தில், மத்திய தேர்வாணையம் அக்டோபர் 31ஆம் தேதியன்று வெளியிட்ட அறிவிக்கையின் படி ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகள் ( Combined Graduate level Examinations (Tier 1) அறிவியல் உதவியாளர் (Scientific Assistant in IMD Examinations) பதவிக்கு டிசம்பர் 14ஆம் தேதி முதல் 16க்குள்ளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வுகள்
இதே தேதிகளில் தமிழக கல்லூரிகளில் முதுகலைப் பட்ட செமஸ்டர் தேர்வுகள் இருப்பதால் இந்த பணி நியமன தேர்வுகளில் பங்கேற்க இயலாத நிலை ஏற்படும். கடந்த காலங்களில் மத்திய அரசு துறை/ நிறுவனங்களின் பணி நியமனங்களில் உரிய பங்கு தமிழகத்திற்கு கிடைக்கவில்லை என்ற நிலைமைகள் இருந்துள்ளன.

ஏற்கனவே இந்த நிலை
2011 இல் அறிவியல் உதவியாளர் தேர்வுகளில் வெற்றி பெற்ற 465 பேரில் 3 பேர், 2017 இல் வெற்றி பெற்ற 1165 பேரில் ஒரே ஒருவர் மட்டுமே தமிழர் என்ற தகவல்கள் தரப்படுகின்றன. 2022 இல் வாசலே இழுத்து மூடப்படுவது போல தேதிகள் உள்ளன. ஆகவே தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும் என எஸ்.எஸ்.சி மற்றும் இந்திய வானியல் துறைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications