எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் பயணத் திட்டம்.. சுற்றுலா துறை அமைச்சர் அறிவிப்பு
சென்னை: சென்னையில் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் எனும் திட்டத்தை தொடங்குவதாக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக சட்டசபையில் அமைச்சர் மதிவேந்தன் கூறுகையில் பொது தனியார் பங்களிப்புடன் Hop On, Hop Off என்ற திட்டம் செயல்படுத்தப்படும். சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம் என்ற திட்டத்திற்கு ரூ 1.50 கோடி மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் நவீன வசதிகளுடன் ரூ 15 கோடியில் மேம்படுத்தப்படும். சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் திருப்பதி சுற்றுலாவுக்கு தினசரி தரிசன நுழைவுச் சீட்டை 1000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் சிலைக்கு செல்ல கன்னியாகுமரியில் ரூ 7 கோடி மதிப்பில் கூடுதலாக புதிய படகு இறங்குதளம் அமைக்கப்படும்.
கன்னியாகுமரி முட்டம் கடற்கரை, திற்பரப்பு நீர் வீழ்ச்சி, சுற்றுலா தலங்கள் ரூ 6.60 கோடியில் மேம்படுத்தப்படும். வண்டலூர், கோவளம், ஏற்காடு சுற்றுலாத் தலங்களில் ரூ 75 லட்சம் மதிப்பில் சிறு உணவகங்கள் அமைக்கப்படும்.
4 முக்கிய கோயில்களில் முப்பரிமாண லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி - ஒளிக்காட்சி அமைக்கப்படும். சென்னையில் நடந்தது போல 'நம்ப ஊரு' திருவிழா போன்று அனைத்து பகுதிகளிலும் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில், புராதன சின்னங்களை கண்டுகளிக்க சுற்றுலாத்துறை சார்பில் எங்கும் ஏறலாம் - எங்கும் இறங்கலாம் என்ற பேருந்து சேவை துவக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள், ஆட்டோ மற்றும் காரில், அதிக கட்டணம் செலுத்தி, முக்கிய இடங்களை பார்வையிட்டு வரும் நிலையில், இந்த பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. 50 ரூபாய் குறைந்த கட்டணத்தில், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, இந்தப் பேருந்தில் பயணம் செய்யலாம்.
-
இந்த ஒரு ப்ராஜக்ட் போதும்.. சென்னையின் அடையாளமே மாறப்போகிறது.. பணிகள் ஓவர்.. எதிர்பார்க்காத திட்டம் -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கோவை டூ தென்காசி வரை.. அடுத்த 3 மணி நேரம் பிச்சு உதறப்போகுது கனமழை.. உஷார் மக்களே! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
ஏழைகளின் ஊட்டி.. கோடை விடுமுறையில் குறைந்த செலவில் ஜில் செய்யனுமா? இந்த ஸ்பாட்டை மிஸ் பண்ணிடாதீங்க -
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு












Click it and Unblock the Notifications