அதிமுக ஆட்சியில் எவ்ளோ.. இப்போ எவ்ளோ? ‘லிஸ்ட்’ போட்டு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!
சென்னை : மாண்டஸ் புயலின்போது தமிழ்நாடு அரசின் மின் வாரியம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும் பராமரிப்பு பணிகளாலும், மாண்டஸ் புயலால் 1134 மின் கம்பங்கள் மட்டுமே சேதமடைந்துள்ளன எனத் தெரிவித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியின்போது ஏற்பட்ட புயல்களின்போதான மின் கம்ப சேதம் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் ஏற்பட்ட தானே, கஜா, நிவர் உள்ளிட்ட புயல்களால் ஏற்பட்ட சேத விவரத்தை வெளியிட்டுள்ள செந்தில் பாலாஜி, தற்போதைய திமுக அரசின் நடவடிக்கையால் 1,134 மின் கம்பங்கள் மட்டுமே சேதமடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் திமுக அரசு மெத்தனம் காட்டியதாக விமர்சித்த நிலையில் அதற்கு பதிலடியாக இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

மாண்டஸ் புயல் சேதம்
மாமல்லபுரம் அருகே கடந்த டிசம்பர் 9ஆம் தேதி இரவு கரையை கடந்த மாண்டஸ் புயலால், சென்னை நகரில் 400க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதேபோல் 200க்கும் மேற்பட்ட மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. காற்றின் சீற்றம் காரணமாக மின் கம்பங்கள், 200க்கும் மேற்பட்ட சாலைகள், 15க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களும் சேதம் அடைந்தன. மேலும், புயல் மற்றும் சூறைக்காற்றால் மெட்ரோ ரயில் நிலையங்களின் மேற்கூரைகள் சேதமடைந்தன. சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலைமையை சீரமைக்க களப்பணியில் ஈடுபட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெருமளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தன. 17 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இந்தப் பணிகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டனர். புயல் கரையைக் கடந்துகொண்டிருந்த நேரத்தில் சுமார் 5000 பணியாளர்களும் ஒட்டுமொத்தமாக 25,000 பணியாளர்களும் புயல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மின்துறை அமைச்சர்
புயல் காற்றால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக 10 துணை மின் நிலையங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 600 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், புயல் கரையைக் கடந்தபிறகு அடுத்த நாள் மதியத்திற்குள் பாதி இடங்களுக்கு மேல் மின் இணைப்புகள் சரிசெய்யப்பட்டன. மீதி இடங்களிலும் விரைந்து மின்சாரம் தரப்பட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அப்போது தெரிவித்தார். எனினும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புயல் நடவடிக்கைகளில் திமுக அரசு மெத்தனம் காட்டியதாக விமர்சித்தன.

செந்தில் பாலாஜி ட்வீட்
மேலும், வர்தா, கஜா புயல் போன்றவற்றின்பொது அதிமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் அதிமுகவினர் கூறி வந்தனர். இந்நிலையில், அதிமுக ஆட்சியின்போது ஏற்பட்ட புயல் பாதிப்புகளின் போது ஏற்பட்ட மின் கம்பங்கள் சேதத்தையும், தற்போதைய நிலவரத்தையும் ஒப்பிட்டு பட்டியல் போட்டு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

அன்றும் - இன்றும்
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, "தேனினும் இனிய தமிழ் பேசிடும் மக்கள், வானினும் உயர்வாக வணங்கிடும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு மின் வாரியம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும் பராமரிப்பு பணிகளாலும், மாண்டஸ் புயலால் 1134 மின் கம்பங்கள் மட்டுமே சேதமடைந்துள்ளன.
2011 : தானே புயலால் 52,000 மின் கம்பங்கள் சேதம்.
2016 : வர்தா புயலால் 49,100 மின் கம்பங்கள் சேதம்.
2017 : ஒக்கி புயலால் 15,858 மின் கம்பங்கள் சேதம்.
2018 : கஜா புயலால் 3.30 லட்சம் கம்பங்கள் சேதம்.
2020 : நிவர் புயலால் 8,000 மின் கம்பங்கள் சேதம்.
எனத் தெரிவித்துள்ளார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications