செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்கவில்லை.. ரசிகர்களை ஏமாற்றிய தோனி.. சென்னை வருகை ரத்து!
சென்னை : செஸ் ஒலிம்பியாட் தொடரின் நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.
Recommended Video
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.
பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வந்த இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்தும் தமிழ்நாடு அரசின் சிறப்பான ஏற்பாடுகள் பற்றியும் சர்வதேச நாடுகளின் செஸ் வீரர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

இறுதி நாள்
இதில் இந்தியாவை பொறுத்தவரை மொத்தம் 6 அணிகள் விளையாடின. இதில் 3 ஆண்கள் அணிகளும், 3 பெண்கள் பெண்கள் அணிகளும் பங்கேற்றன. பரபரப்பாக நடைபெற்று வந்த இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கின்றன. இன்று காலை இறுதிச் சுற்று போட்டிகள் தொடங்கி இருக்கின்றன.

இந்திய அணி
11 சுற்றுகளில் முடிவில் அதிக புள்ளிகளை பெறும் அணியே செஸ் ஒலிம்பியாட் பட்டத்தை வெல்லும். நேற்று 10 வது சுற்று போட்டிகள் நடந்து முடிந்து இருக்கின்றனர். இந்திய பி அணியில் விளையாடிய தமிழ்நாடு வீரர் குகேஷ் தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றிபெற்றும், ஒரு போட்டியில் சமனும், ஒரு போட்டியில் தோல்வியும் தழுவினார்.

10 வது சுற்று
நேற்று நடைபெற்ற 10 வது சுற்று போட்டியில் இந்திய பி அணி உஸ்பெகிஸ்தானுடன் மோதியது. இந்த போட்டியில் நோடிர்பெக்குடன் மோதிய குகேஷ், 72 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தா, சிண்டாரோவ் என்ற வீரரை எதிர்கொண்டார். அதில், 77 வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று உள்ளார். நிஹல், அந்திபன் ஆகிய 2 இந்திய வீரர்கள் சமன் செய்துள்ளார்கள்.

தோனி பங்கேற்கவில்லை
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அழைப்பிதழிலும் அவர் பெயர் இடம்பெற்ற நிலையில், திடீரென தோனி இதில் பங்கேற்க மாட்டார் என்று திடீரென தகவல் வெளியானது. தோனி இந்த விழாவுக்காக அமெரிக்காவில் இருந்து கிளம்புவது தாமதமானதால், அவர் சென்னை வரும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி பங்கேற்கவில்லை.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications