சொந்தங்களை ரயில் ஏற்றிவிட போகிறவரா நீங்கள்? பிளாட்பார்ம் பக்கம் போனா கட்டணம் ஷாக் அடிக்கும்!
சென்னை: தெற்கு ரயில்வே நிர்வாகம் பிளாட்பார்ம் டிக்கெட் விலையை இரு மடங்காக உயர்த்தி அறிவித்துள்ளது. சென்னை உட்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை தற்போதைய ரூ10-ல் இருந்து ரூ20 ஆக உயர்த்தி உள்ளது தெற்கு ரயில்வே.
ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் கொரோனா காலத்தில் மிக கடுமையாக உயர்த்தப்பட்டன. இதன்பின்னர் ஒரு பிளாட்பார்ம் டிக்கெட் ரூ10 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது ஏற்கனவே பொதுமக்களுக்கு சுமையாகத்தான் இருந்து வருகிறது.

தற்போது பண்டிகை காலங்கள் என்பதால் ரயில் நிலையங்களில் இயல்பாகவே கூட்டம் அலைமோதும். இந்நிலையில் சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளது தெற்கு ரயில்வே.
இந்த 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ10-ல் இருந்து ரூ20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கட்டண உயர்வானது அக்டோபர் 1-ந் தேதி முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கத்தான் இந்த பிளாட்பார்ம் டிக்கெட் உயர்வு என கூறினாலும் பொதுமக்களுக்கு இதுமிகப் பெரும் சுமையாகவே இருக்கிறது என்பதுதான் ஆதங்கம்.
இதேபோல் நாட்டின் பல ரயில்வே மண்டலங்கள் பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வை அறிவித்துள்ளன. விஜயவாடா கோட்டத்தில் ஒரு பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications