பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் போறீங்களா? செப்.12 முதல் ரயில் டிக்கெட் ரிசர்வேசன்
சென்னை:2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு சென்னையில் வசித்துவரும் பிற மாவட்டத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவார்கள். சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களுக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது.
பண்டிகை வந்தாலே அதை குடும்பத்தோடும் உறவினர்களோடும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். நவராத்திரி, தீபாவளி, பொங்கல் பண்டிகை என வரிசையாக பண்டிகைகள் வர உள்ளன. தொடர் விடுமுறையும் வர உள்ளதால் படிக்கவும், வேலை செய்யவும் வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.
சென்னை, கோவை, திருப்பூர், உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். தென்னக ரயில்வேயும் ரயில் முன்பதிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தை பொங்கல் பண்டிகை
2023ஆம் ஆண்டு ஜனவரி 14ல் போகி பண்டிகை துவங்கி, 17ம் தேதி வரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் IRCTC இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்வர்.

ரயில் டிக்கெட் முன்பதிவு
தை பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வோர் வரும் 12ம் தேதி முதல் தங்களது பயணத்திற்கு ஏற்ப ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள் ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன் டிக்கெட் எடுத்து கொள்ளும் வசதி இருக்கிறது. இதனால் வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள் முன்கூட்டியே ரயில் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.

முன்பதிவு எப்போது
பொங்கல் பண்டிகைக்கு செல்வோர், அடுத்த வாரம் முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி ஆம்10ம் தேதி பயணிக்க விரும்புவோர் வரும் 12ம் தேதியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது, முன்பதிவு துவங்கிய அடுத்த சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்து விடும். ஏற்கனவே, தீபாவளிக்கு அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளன. காத்திருப்பு பட்டியல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களை தேர்வு செய்து சிறப்பு ரயில்கள் இயக்குவது, கூடுதல் பெட்டிகள் இணைப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications