முடிந்தது ஆர்டிஓ விசாரணை.. சித்ரா மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழுமா?.. பரபரக்கும் 250 பக்க அறிக்கை!
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான விசாரணை நிறைவடைந்து ஆர்டிஓ அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. 250 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில்தான் சித்ராவின் மரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழும் நிலை உள்ளது.
நடிகை சித்ரா, கடந்த 9-ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது பிரேத பரிசோதனை அறிக்கையும் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவே கூறியது.
இந்த நிலையில் சித்ராவுக்கும் தொழிலதிபர் என கூறிக் கொள்ளும் ஹேமந்திற்கும் கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஹேமந்தின் பெற்றோர்
சித்ராவின் பெற்றோர், ஹேமந்தின் பெற்றோர், ஹேமந்த், சித்ராவின் நெருங்கிய தோழிகள், சித்ராவுடன் நடித்த நடிகைகள், இறப்பதற்கு முன்னர் நடத்தப்பட்ட தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள் என பெருமபாலானவர்களிடம் விசாரணையை ஆர்டிஓ திவ்யஸ்ரீ மேற்கொண்டார்.

வரதட்சிணை கொடுமை
இந்த நிலையில் சித்ராவின் உதவியாளர் ஆனந்திடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் விசாரணை முடிவடைந்து ஆர்டிஓ 250 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை நாளை பூந்தமல்லி போலீஸாரிடம் அவர் தாக்கல் செய்கிறார். சித்ரா வரதட்சிணை கொடுமையால் இறந்தாரா? என்றால் அவர் அதற்காக இறக்கவில்லை என தெரிகிறது.

வாக்குமூலங்கள்
சித்ரா வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என ஆர்டிஓ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சித்ராவின் மரணம் குறித்து 15 பேரின் வாக்குமூலங்கள் எழுத்துப்பூர்வமாக வாங்கப்பட்டது. சித்ராவின் உறவினர்களிடமே அதிக அளவில் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

சித்ராவின் மரணம்
அந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் குறித்து போலீஸார் நாளை அறிவிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சித்ராவின் மரணம் குறித்து பல்வேறு வதந்திகளுக்கு இந்த ஆர்டிஓ அறிக்கை முற்றுப்புள்ளி வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications