10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது
10,11,12 பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.
சென்னை: 10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்தேர்வுக்கான அட்டவணையை அமைச்சர் வெளியிடுகிறார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படவில்லை. மாணவர்கள் ஆல்பாஸ் செய்யப்பட்டனர்.
இதனிடையே கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. பொதுத்தேர்வு சந்திக்கவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவ்வப்போது சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது.
இதற்கிடையில்,10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நிச்சயம் பொது தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே கூறியிருந்தார்.
கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
உக்ரைனில் உயிரிழக்கும் அப்பாவிகள்... 3 குழந்தைகள் உள்பட 198 பேர், போரில் பலி
இந்நிலையில்,10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட உள்ளார்.