பஸ் டிக்கெட் உயர வாய்ப்பு - “20 வருசத்துல 2 முறைதான்” - சூசகமாக சொன்ன போக்குவரத்து துறை!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. முன்னதாக, போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில், 2001ஆம் ஆண்டுக்குப் பின் தமிழ்நாட்டில் 2 முறை மட்டுமே பேருந்து கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், விரைவில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படும் என்றும், அதற்கான சமிக்ஞையே இந்தக் குறிப்பு என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டீசல் விலை உயர்வு
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. டீசல் விலை உயர்வால் பேருந்து கட்டணங்கள் மற்ற மாநிலங்களில் உயர்த்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே போக்குவரத்துக் கழகங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
டீசலின் கடுமையான விலை உயர்வால் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மாதந்தோறும் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், தமிழ்நாட்டிலும் அரசு மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் எனக் கூறப்பட்டது.

அமைச்சர் சிவசங்கர்
இந்நிலையில், சமீபத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக மாற்றப்பட்ட சிவசங்கர், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை அதிகரித்தாலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படக் கூடாது என்ற முடிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.

2 முறை மட்டுமே
இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட போக்குவரத்துத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், 2001ஆம் ஆண்டுக்கு பின் தமிழ்நாட்டில் 2 முறை மட்டுமே பேருந்து கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2001க்குப் பிறகு 2011 மற்றும் 2018ம் ஆண்டுகளில் பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் கர்நாடகத்தில் 16 முறை, ஆந்திராவில் 8 முறை, கேரளாவில் 9 முறையும் பேருந்து கட்டணம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Recommended Video

உயர்த்த திட்டம்
கொள்கை விளக்கக் குறிப்பில் இந்த தகவல் வெளியாகியிருப்பதால், விரைவில் இங்கும் பேருந்து கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படலாம் எனப் பேச்சு கிளம்பியுள்ளது.
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும், மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேலும், இன்று சட்டசபையில், அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனி இலவசமாக பயணிக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
இவற்றை ஈடுகட்டவும், டீசல் விலை உயர்வை சமாளிக்கவும், கனத்த மனதோடு பேருந்து கட்டண உயர்வு அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications