+1,+2 மாணவர்களே பொதுத்தேர்வு அப்டேட்..செய்முறை தேர்வு மார்ச் 7 முதல் ஆரம்பம்..ரெடியாகுங்க
சென்னை: தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 7 ஆம் தேதி துவங்கி, 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வுகளை இரண்டு தேர்வுகளிலும் சேர்த்து 10 லட்சம் பேர் எழுத இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2022- 23 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த நவம்பர் மாதம் 07ம் தேதி வெளியிட்டார். அதன்படி, மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ல் தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை பொதுத்தேர்வு. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ல் தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டுக்கான, 12ம் வகுப்பு பொது தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதனிடையே 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் கடந்த 04ம் தேதி வெளியானது. அடுத்த மாதம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 7 ஆம் தேதி துவங்கி, 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இந்த மாதம் 31ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. செய்முறைத் தேர்வுகளை இரண்டு தேர்வுகளிலும் சேர்த்து 10 லட்சம் பேர் எழுத இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக பிப்ரவரி மாதம் செய்முறை தேர்வுகள் முடிக்கப்பட்டு விடும் நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் செய்முறை தேர்வுகளும் பொதுத்தேர்வுகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications