அரைநிர்வாணமாக்கி! சிறைக்கு போனது இதுக்குதானா? ஜெயக்குமார் "மோதிய" வார்டில் என்ன ரிசல்ட்? ட்விஸ்ட்
சென்னை: சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக நிர்வாகி ஒருவரை தாக்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வார்டுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. முதல்கட்ட டிரெண்டுகளை பார்க்கும் போது திமுக இமாலய வெற்றியை இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி 21 மாநகராட்சிகளில் 20ல் திமுகதான் முன்னிலை வகிக்கிறது. சிவகாசியில் மட்டும் அதிமுக 8 வார்டுகளிலும், திமுக 6 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கிறது.

ஜெயக்குமார்
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் திமுக நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இங்கு திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஆபீசர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி இருந்தார். இதையடுத்து சஞ்சீவிராயன் கோவில் தெருவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேராக சென்று சோதனைகளை செய்தார்.

49வது வார்டு
இது 49வது வார்டுக்கு கீழ் வரும் பகுதியாகும். அங்கு காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் இருந்த திமுக நிர்வாகி ஒருவரை அமைச்சர் ஜெயக்குமார் ஆட்கள் தாக்கினர். அவர் கள்ள ஓட்டு வந்து போட வந்த போது அவரை கையும் களவுமாக பிடித்து தாக்கியதாக ஜெயக்குமார் தரப்பு கூறியது. திமுக நிர்வாகி என்று கருதப்படும் அந்த நபரை ஜெயக்குமார் ஆட்கள் மேலாடை இன்றி அடித்து, அழைத்து வந்தனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது.

நீதிமன்ற காவல்
இந்த சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் மீது திமுகவை சேர்ந்த ரமேஷ் என்பவர் புகார் கொடுத்தார். இதில் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது 10 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் நேற்று இரவு ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவரின் பெயில் மனு நாளை எழும்பூர் மேஜிஸ்டிரேட் முன் விசாரணைக்கு வர உள்ளது.

சர்ச்சை
இவ்வளவு சர்ச்சைக்கும், முன்னாள் அமைச்சரின் கைதுக்கும் வித்திட்ட இந்த 49வது வார்டில் இன்று காலையில் இருந்து திமுகதான் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் தற்போது இங்கு திமுக வேட்பாளர் இளைய அருணா வெற்றி பெற்றுள்ளார். இவர் சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆவார். இவருக்கு எதிராக அங்கு ஜெயக்குமாருக்கு நெருக்கமான நிர்வாகிகள் பலர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தனர். இப்படிப்பட்ட நிலையில்தான் பல பிரச்சனைகளுக்கு இடையே இங்கு திமுக வேட்பாளர் இளைய அருணா வெற்றி பெற்றுள்ளார்.
-
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்!












Click it and Unblock the Notifications